மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் தற்போது புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது என ஜெர்மனியில் உள்ள German Institute for International and Security Affairs ஆய்வு நிறுவனத்தின் நிபுணர் ஹமிட்ரெசா அசிசி தெரிவித்துள்ளார். இவருடைய கணிப்புகள் உலக நாடுகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என்றாள் மிகையில்லை.
ஹமிட்ரெசா அசிசி கணிப்பை ஒற்றை வரியில் கூற வேண்டும் என்றால் இந்த போர் தற்போது "எரிசக்தி உள்கட்டமைப்பு தாக்குதல்" கட்டமாக மாறியுள்ளது. முதலில் எல்லை பாதுக்காப்பு, ஆட்சி மாற்றம், மக்கள் சுதந்திரம் போன்ற அளவில் இருந்த நிலையில் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், ஈரானின் முக்கிய எரிவாயு வளமான South Pars Gas Field மீது தாக்குதல் நடத்தியது தான் இந்த மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது என ஹமிட்ரெசா அசிசி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் ஈரானின் எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், அதன் பொருளாதார அடித்தளமே நேரடியாக தாக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பதிலடி
இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் தனது நடவடிக்கைகளை வளைகுடா முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக Ras Laffan Industrial City போன்ற முக்கிய LNG மற்றும் தொழில்துறை மையங்கள் தாக்கப்பட்டுள்ளன. இது இந்த மோதலை பிராந்திய மட்டத்திலிருந்து உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
புதிய ராணுவ உத்தி
ஈரான் தற்போது பதிலுக்கு பதில் என்ற சம அளவிலான பதிலடி என பழைய அணுகுமுறையை விட்டு, அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய உத்தியை பின்பற்றுகிறது. முன்பு காட்டிய கட்டுப்பாடு தவறான முடிவுகளுக்கு வழிவகுத்ததாக கருதி, இப்போது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் தாக்குதல்களை மேற்கொள்ள ஈரான் முடிவு செய்துள்ளது.
இஸ்ரேலில் நேற்று விமான நிலைய தாக்குதல் முதல் இன்று கத்தார் எரிவாயு தளம் வரையில் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்க தலையீடு அபாயம்
ஈரான் தாக்குதள் அதிகரித்துள்ள வேளையில் இந்த மோதலில் அமெரிக்காவின் நேரடி தலையீடு அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் ஆலோசனைகளில், ஈரானின் யுரேனியம் கையிருப்புகளை குறிவைத்து சிறப்பு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது அல்லது Kharg Island போன்ற முக்கிய இடங்களை கைப்பற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என Hamidreza Azizi தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தயாராகும் ஈரான்
இதற்கு பதிலாக, ஈரான் தனது தெற்கு பகுதிகளில் IRGC சிறப்பு படைகளை குவித்து, ராணுவ வீரர்களை வைத்து தரைவழியிலான போருக்கும் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சில ஈரான் நிபுணர்கள், அமெரிக்க படைகள் நேரடியாக தரையில் இறங்கினால், அதை தங்களுக்கே சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என கருதுகின்றனர் எனவும் Hamidreza Azizi தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல்கள்
இதே நேரத்தில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக "டிகேபிடேஷன் ஸ்ட்ரைக்" எனப்படும் தலைமைத் தாக்குதல்கள் மூலம் ஈரானின் முக்கிய அதிகாரிகளை குறிவைத்து வருகிறது. சமீபத்தில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கத்திப் உயிரிழந்தது இதற்கு எடுத்துக்காட்டு.
மேலும், இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் வடக்கு மாகாணங்களான கிலான் மற்றும் மசந்தரான் பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளன. இது போர் பரப்பளவு மேலும் அதிகரித்து வருவதை காட்டுகிறது.
மொத்தத்தில், இந்த மோதல் தற்போது ராணுவ தாக்குதல்களைக் கடந்து, எரிசக்தி மற்றும் பொருளாதார அடித்தளங்களை குறிவைக்கும் நிலைக்கு மாறியுள்ளது. இதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி சந்தை, விலை நிலை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை மீது நீண்டகால தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

கண்ணுக்கு தெரியாத ஆபத்து.. ஒரு 10 டாலருக்கு பின்னால் இப்படியொரு பிரச்சனை இருக்கா..?!

ஈரான் போர் முடிவுக்கு வருவது எப்போது? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி!!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

டிரம்ப்-ன் ராஜதந்திரம்.. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை..!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு இல்லாமல் காக்கும் தென்னிந்தியா: பூமிக்கடியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம்

ஈரான் போர்: டிரம்புக்கு குட்டு வைத்த நட்பு நாடுகள்; எங்கள கேட்டா போர் தொடுத்தீங்க என கேள்வி!!

முதல்ல LPG சிலிண்டரை சரண்டர் செய்யவும்.. அரசின் உத்தரவால் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் சிக்கல்..?!

துபாய், அபுதாபி ஹோட்டல்களில் 70% தள்ளுபடி.. வெளிநாட்டு பயணிகள் வராத காரணத்தால்.. புது ஐடியா..!!



Click it and Unblock the Notifications