காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியில் நடந்து வரும் போர் தாக்குதலை நிறுத்துவதற்கும், பயங்கரவாதக் குழுவால் பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஒரு "விரிவான புதிய திட்டத்தை" இஸ்ரேல் சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஜோ பைடன் அறிவிப்பின் படி, கத்தார் ஹமாஸுக்கு இந்த புதிய திட்டத்தை அனுப்பியுள்ளதாகவும், போர் நிறுத்தத்தை நோக்கிய முடிவுகளை இதன் வாயிலாக எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் கொடுத்த திட்டத்தின் படி, இதன் ஆரம்பக் கட்டம் ஆறு வாரங்கள் நீடிக்கும், காசாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இஸ்ரேலியப் படைகள் திரும்பப்பெறப்பட்டு முழுமையான போர்நிறுத்தம் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து பெண்கள், முதியவர்கள், காயமடைந்தவர்கள் உட்படப் பல பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை இந்த மோதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பல நாட்களாக இஸ்ரேலின் மோசமான தாக்குதல் குறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை போர் நிறுத்தும் குறித்த அறிவிப்பு வந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
சமீபத்தில் இஸ்ரேல் ராணுவப் படைகள் காசாவில் முக்கிய பகுதியாக இருக்கும் மத்திய ரஃபாவிற்குள் நுழைந்து அப்பகுதியைக் கைப்பற்றியது மட்டும் அல்லாமல் அங்கு பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் புகைப்படங்கள் உலக மக்களைக் கண்கலங்க வைத்தது.
இந்த சம்பவம் நடந்த பின்பும் இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துவதற்கான வரம்பு எட்டப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள போர் நிறுத்த அறிவிப்பு பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் விலை, தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும்.
Gold: தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இஸ்ரேல் தாக்குதல் உள்ளது, இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டதால் தங்கம் மீது முதலீடு செய்தனர்.
தற்போது போர் நிறுத்தம் காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் குறைவது மட்டும் அல்லாமல் வெளியேறுவதற்கும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
Stock Market: இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 3 மாதங்களாக மந்தநிலை நிலவுகிறது. தற்போதைய போர் நிறுத்த அறிவிப்பு மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாகச் சர்வதேசச் சந்தையிலிருந்தும் முதலீடு குவிய வாய்ப்பு உள்ளது.
எண்ணெய் விலை வீழ்ச்சி: ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் OPEC+ கூட்டத்திற்கு முன்னதாக, சந்தையில் அதிக எண்ணெய் இருப்பு இருக்கும் காரணமாக, மூன்றாவது நாளாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
More From GoodReturns

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!



Click it and Unblock the Notifications