இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட ஆண்டுகளாகவே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளும் ஏவுகணை வீசுவது, டிரோன்கள் மூலம் தாக்கி கொள்வது என எதிர்ப்பை பதிவு செய்வார்கள். ஆனால் இந்த முறை இஸ்ரேல் அமெரிக்க ராணுவத்தோடு கூட்டு வைத்து ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில் கடும் கோபத்தில் இருக்கக்கூடிய ஈரான் ராணுவம், இஸ்ரேலின் பல்வேறு இடங்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இவற்றை தடுத்தாலும் சில இடங்களில் குண்டுகள் விழுகின்றன.

இதனால் இஸ்ரேலில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்த வண்ணம் இருக்கின்றனர். இதற்காகவே Bunker எனப்படும் பதுங்கு குழிகள் மற்றும் நிலத்தடி தங்குமிடங்கள் இஸ்ரேலில் உண்டு. இந்நிலையில் ஈரான் தாக்குதல் தீவிரமடைந்துள்ள சூழலில் இஸ்ரேலில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் பங்க்ர் மற்றும் பதுங்குகுழிகளில் தங்க அனுமதிக்கப்படவில்லை, இந்தியர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது என கூறி ஒரு புகைப்படம் வெளியானது.
எக்ஸ் பக்கத்தில் வெளியான புகைப்படத்தில் இஸ்ரேல் நாட்டு அரசு இந்தியர்கள் ஈரானின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பங்கர்களை வழங்க மறுத்ததால் இந்தியர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்க பாதையில் தங்கக்கூடிய நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாகிறது. அதில் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் பலரும் படுத்து உறங்குவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் இஸ்ரேல் தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் கய் நிர் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சில குறிப்பிட்ட சுரங்கப்பாதைகளை அவசரகால சூழல்களில் தங்குமிடங்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் போர் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தப்பிக்க இந்த அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ்களில் மக்கள் தஞ்சம் அடைந்து கொள்ளலாம் என இஸ்ரேல் அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது என்றார்.
இந்தியர்கள் மட்டுமல்ல இஸ்ரேல் நாட்டு மக்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டவர்களும் இதுபோல மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்கப்பாதைகளில் தற்போது தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட உடனேயே மக்கள் இது போன்ற UNDERGROUND SPACE-களுக்கு சென்று விடுவார்கள் என அவர் விளக்கம் தந்திருக்கிறார்.
இந்தியர்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பான இடம் வழங்கவில்லை என பகிரப்படக்கூடிய இந்த புகைப்படத்தில் உண்மை இல்லை என கூறும் அவர் இந்த புகைப்படத்தில் பாருங்கள் பல்வேறு நாட்டு மக்களுமே இருப்பது தெரியும் எனக் கூறியிருக்கிறார். மெட்ரோ ரயில் நிலையங்கள் அரசாங்கத்தால் பாதுகாப்பான இடங்களாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர்கள் ஏராளமானவர்கள் இரவு நேரங்களில் இங்கே தஞ்சம் அடைவதை நான் பார்த்திருக்கிறேன் இந்தியர்களும் அது போல தான் தற்போது கஞ்சமடைந்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியா குடிமக்கள் வேலை, வர்த்தகம், கல்வி நோக்கங்களுக்காக வசிக்கின்றனர். இவர்கள் பாதுகாப்பாக இருக்க இஸ்ரேல் நாட்டில் செயல்படக்கூடிய இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் வெளியிடக்கூடிய அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கூறி இருக்கிறது. மேலும் மூடப்பட்ட அறைகளிலேயே முடிந்தவரை தங்கி இருக்க வேண்டும் என்றும் தேவை இல்லாமல் வெளியிலே வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மரணம்..? இஸ்ரேல், டிரம்ப் பகிரங்க அறிவிப்பு..!

ஈரான் அட்டாக்.. டிரம்ப்-க்கு எதிராக நிற்கும் அமெரிக்க அரசியல் தலைவர்கள்.. முதல்ல எங்களுக்கு பதில சொல்லுங்க..!!

இஸ்ரேல் - ஈரான்: இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகம் வெளியிட்ட உத்தரவால் NRI-கள் அச்சம்..!!

ஈரான் போர்: ஞாயிற்றுக்கிழமையிலும் உயர்த்தப்பட்ட தங்கம் விலை!! இனி தங்கம் விலையை கையில பிடிக்க முடியாது!!



Click it and Unblock the Notifications

