இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ 50 வருட வரலாற்றில் முதல் முறையாகத் தனியார் அமைப்புகளுக்குத் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இரண்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் யூஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் பரிசோதனை செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கும், ஒரு கல்வி அமைப்பிற்கும் அனுமதி அளித்துள்ளது.

இதோடு அடுத்த சில மாதங்களில் இரு தனியார் அமைப்புகளும் தங்களது செயற்கைக் கோள் இன்ஜின்களை ஸ்ரீஹரி கோட்டா ஸ்பேஸ்போர்ட் மற்றும் திருவனந்தபுரம் ராக்கெட் சென்டரிலும் பரிசோதனை செய்ய உள்ளது. மேலும் இஸ்ரோ விரைவில் தனது செயற்கோள் புகைப்படங்களையும் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளது.
யூஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் கிடைத்த தகவல்கள் படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மற்றும் பெங்களூரைச் சேர்ந்த Syzygy ஸ்பைஸ் டெக்னாலஜிஸ் ஆகிய இரு நிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த இரு செயற்கைக்கோள்களைப் பரிசோதனை செய்யும் போது சோலார் பேனல் அமைப்பில் பிரச்சனை இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதைச் சரி செய்ய இஸ்ரோ அணி உதவி செய்வதாகவும் இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். இதேவேளையில் UNITYsat-ன் separation system சரி செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
UNITYsat - ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜேப்பியார் கல்லூரி, நாக்பூரில் இருக்கும் ஜிஹெச் ராய்சோனி கல்லூரி, கோவையைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளும் தயாரித்த தனித்தனி செயற்கைக்கோள் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் இன்ஜினை ஸ்ரீஹரி கோட்டா ஸ்பேஸ்போர்ட்-லும், சென்னையைச் சேர்ந்த அக்னிகுள் காஸ்மோஸ் தனது இன்ஜினை திருவனந்தபுரம் ராக்கெட் சென்டரிலும் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications