கோயம்புத்தூர், மதுரைக்கு ஜாக்பாட்.. குத்தாட்டம் போடும் ஐடி ஊழியர்கள்..!

இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் உருவாகியிருக்கும் ரெசிஷன் அச்சத்தால் வர்த்தக பாதிப்பில் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் செலவுகளை குறைத்து, ஊழியர்கள் மூலம் அதிகப்படியான செயல்திறனை பெறுவது மட்டும் தான் ஐடி நிறுவனங்களின் முக்கிய இலக்காக உள்ளது.

செலவுகளை குறைக்க வேண்டும் என்றால் பணிநீக்கம் மட்டுமே வழி இல்லை என்பதை உணர்ந்த இந்திய ஐடி நிறுவனங்கள் காக்னிசென்ட், அக்சென்சர் போல் பணிநீக்கம் அறிவிக்காமல் மாற்று வழியை தேடியுள்ளது.

கோயம்புத்தூர், மதுரைக்கு ஜாக்பாட்.. குத்தாட்டம் போடும் ஐடி ஊழியர்கள்..!

ஐடி நிறுவனங்கள் செலவுகளை குறைக்க முக்கியமான இடமாக ரியல் எஸ்டேட் செலவுகள் உள்ளது, இந்த வகையில் பெரு நகரங்களில் அதிகப்படியான தொகைக்கு வாடகைக்கும், குத்தகைக்கும் இருக்கும் அலுவலகத்தை குறைத்துவிட்டு சிறு நகரங்களில் அலுவலகத்தை திறக்கவும், விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

இது புதிய விஷயமில்லை, கொரோனா தொற்று காலத்திலேயே சிறிய நகரங்களுக்கு படையெடுக்கும் படலம் துவங்கியிருந்தாலும், தற்போது வர்த்தக பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் கோயம்புத்தூர், மதுரைக்கு வரும் ஊழியர்கள், நிறுவனங்கள் எண்ணிக்கை பெரிய அளவில் கடந்த 3 மாதத்தில் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இன்போசிஸ் கோயம்புத்தூரில் அலுவலகத்தை திறந்த உடனேயே பல ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கான கோரிக்கை வைத்த நிலையில், தற்போது அலுவலக விரிவாக்க பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

சிறு நகரங்களுக்கு அலுவலகத்தை மாற்றுவதன் மூலம் ரியல் எஸ்டேட் செலவுகளை குறைப்பது மட்டும் அல்லாமல், ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவது பெரிய அளவில் குறைகிறது. இதேபோல் ஊழியர்களுக்கு சிறந்த work-life balance வழங்குவதற்கும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்கள் பெரிய அளவில் உதவுகிறது.

வீட்டுக்கு அருகிலேயே தான் விரும்பும் பணியும், அதிகப்படியான சம்பளத்துடன் வேலையும் கிடைத்துவிட்டால் யார் தான் வேறு நிறுவனத்திற்கு மாற போகிறார்கள். இதேபோல் சிறிய நகரங்களில் வேறு வேலைவாய்ப்புக்கு உடனடியாக மாறுவதற்கான வாய்ப்புகளும் குறைவு என்பதாலும் இது நிறுவனங்களுக்கு பலன் அளிக்கிறது.

இன்போசிஸ் தற்போது கோயம்புத்தூர், திருவனந்தபுரம், நாக்பூர், இந்தூர், ஹூப்ளி, மொஹாலி ஆகிய பகுதிகளில் அலுவலகத்தை துவங்கி வருகிறது.

3500 ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த காக்னிசென்ட் கடந்த வாரம் செலவுகளை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பெரு நகரங்களில் இருக்கும் அலுவலகத்தை குறைத்துவிட்டு, சிறிய நகரங்களில் இருக்கும் அலுவலகத்திற்கு மாற்ற திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையை சேமிக்க முடிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+