ஐடி சேவை துறை எந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறதோ அதே அளவிற்கு ஐடி-BPM துறையும் புதிய முதலீடுகளுடனும், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடனும் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவில் இருக்கும் பல ஐடி-BPM நிறுவனங்கள் உலக முழுவதும் வாடிக்கையாளர்கள் சேவை, டெக் உதவிகள் பலவற்றை அளித்து வருகிறது.
மேலும் கொரோனா காலத்தில் அனைத்துத் துறை நிறுவனங்களும் ஆன்லைன் சேவை துறையில் இருக்க வேண்டும் எனக் கட்டாயம் உருவாகியுள்ளதால் ஐடி-BPM நிறுவனங்களுக்கான வர்த்தகம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் அதிகரித்துள்ளது.
ஐடி-BPM நிறுவனங்கள்
இந்திய ஐடி-BPM நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 3.75 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இத்துறையில் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை 1.48 லட்சமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
48.5 லட்ச ஊழியர்கள்
இதன் மூலம் 2021-22ஆம் நிதியாண்டுக்குள் இந்திய ஐடி-BPM துறையின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 48.5 லட்சமாக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 2022க்குள் 44.7 லட்சத்தில் 48.5 லட்சமாக உயரும் என டீம்லீஸ் நிறுவனம் கணித்துள்ளது.
ஒப்பந்த ஊழியர்கள்
மேலும் ஐடி சேவை நிறுவனங்களைக் காட்டிலும் ஐடி-BPM நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகம். மேலும் இத்துறை ஊழியர்கள் மத்தியில் ஒப்பந்த வேலைவாய்ப்புகளுக்கு எவ்விதமான மறுப்பு இல்லை என்பது கூடுதல் தகவல். ஐடி-BPM நிறுவனங்கள் ஒப்பந்த வேலைவாய்ப்பு வாயிலாக ஊழியர்கள் வெளியேற்றத்தின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
13 டிஜிட்டல் திறன்
ஐடி சேவை துறை போலவே ஐடி-BPM துறையிலும் டிஜிட்டல் திறனுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. தற்போது ஐடி-BPM நிறுவனங்கள் மத்தியில் சுமார் 13 டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
பயிற்சி
புதிய டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் ஐடி-BPM நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறது. ஐடி சேவை துறைக்கு இணையாக ஐடி-BPM துறையும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications