நடப்பு ஆண்டில் பலருக்கும் மறக்க முடியாத ஆண்டாகவே இருக்கும். அந்தளவுக்கு மக்களை பாடாய்படுத்தி வந்தது இந்த கொரோனா. எனினும் இதில் முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்க கூடிய விஷயம் என்னவெனில் பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பியது தான்.
நடப்பு ஆண்டு பலருக்கும் மறக்க முடியாத ஆண்டாகவே இருக்கும். அந்தளவுக்கு மக்களை பாடாய்படுத்தி வந்தது இந்த கொரோனா. எனினும் இதில் முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்க கூடிய விஷயம் என்னவெனில் பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பியது தான்.
இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நல்ல லாபத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ஐ போலவே வருவாய் விகிதமானது உச்சத்தினை தொட்டது குறிப்பிடத்தக்கது.
தேவை அதிகரிப்பு
தொழிற்துறைகளை பெருந்தொற்று என்பது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. எனினும் ஒவ்வொரு துறையில் டிஜிட்டல் தேவையானது உட்புகுந்துள்ளது. மொத்தத்தில் ஐடி துறையின் தேவையானது அதிகரித்துள்ளது. இதனால் பல துறையினரும் டிஜிட்டல் துறை, கிளவுட் சேவைகளுக்காக கூடுதலாக முதலீடு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து வளர்ச்சி
இதற்கிடையில் தான் ஐடி நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் என்பது மிகப்பெரிய அளவில் சமீபத்திய காலாண்டுகளாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் கூட டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் வளர்ச்சியானது முறையே 17% 21% மற்றும் 30% ஆக அதிகரித்துள்ளது. இது இந்த நிறுவனங்களில் மட்டும் அல்ல ஹெச் சி எல் டெக்னாலஜி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களிலும் கடந்த 5 காலாண்டுகளாக தொடர்ந்து மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
ஐடி-க்காக செலவு
இந்த போக்கு வரும் ஆண்டிலும் தொடரலாம் என கார்ட்னரின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கிடையில் ஐடி துறைக்கான செலவினங்கள் கடந்த 2020ல் 0.9% வளர்ச்சி கண்டது. இதே 2021ல் 9.5% வளர்ச்சி கண்டுள்ளது. இது 2022ம் ஆண்டில் 5.5% ஆக இருக்கலாம் என கார்ட்னர் மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 2020ல் 1.7% ஆகவும், இதே 2021ல் 11.2% ஆகவும், 2022ல் 8.6% ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு சலுகைகள்
இத்தகைய வளர்ச்சிகளுக்கு மத்தியில் நீண்டகாலத்திற்கு பிறகு ஐடி நிறுவனங்கள் பலத்த லாபத்தினை கண்டுள்ளன. இதன் காரணமாக ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் இருந்தன. பங்குதாரர்கள் நல்ல லாபத்தினை கண்டனர். எனினும் இது இனி வரும் காலாண்டுகளில் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஊழியர் வீத வருமானம்
உன்னிப்பாக இந்த விஷயத்தினை கவனித்தோமானால், டிசிஎஸ் நிறுவனத்தில் டிசம்பர் 2020ல் ஒரு ஊழியர் 1% வருவாயினை கொடுத்திருந்த நிலையில், செப்டம்பர் 2021 காலாண்டில் -1% வருவாயினையே கொடுத்துள்ளனர். இதில் இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்கள் நல்ல லாபகரமான நிறுவனங்களாக இருந்தாலும், ஹெச் சி எல், டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
அட்ரிஷன் விகிதம்
ஐடி நிறுவனங்களில் கடந்த காலகட்டங்களில் அட்ரிஷன் விகிதம் என்பது பெரும் சவாலான விஷயமாக இருந்து வந்தது. டிசிஎஸ் நிறுவனத்தில், டிசம்பர் 2020ல் 7.6% ஆக இருந்த விகிதம், செப்டம்பர் 2021ல் 11.9% அதிகரித்துள்ளது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் டிசம்பர் 2020ல் 10% ஆக இருந்த விகிதம், செப்டம்பர் 2021ல் 20.1% ஆக இருந்தது.
இதே விப்ரோ நிறுவனத்தில் 11% ஆக இருந்த விகிதம் , 20.5% ஆக செப்டம்பரில் அதிகரித்துள்ளது.
இதே ஹெச். சி.எல் டெக் நிறுவனத்தில் 10.2% ஆக இருந்த விகிதம், 15.7% ஆக அதிகரித்துள்ளது.
இதே டெக் மகேந்திராவில் 12% ஆக இருந்த விகிதம், செப்டம்பரில் 21.1% ஆக அதிகரித்துள்ளது.
மார்ஜின்
ஐடி துறையில் தேவையானது அதிகம் உள்ள அதே சமயத்தில் திறனுள்ள ஊழியர்களுக்கான தேவையானது அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் சம்பள விகிதம் என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது நிறுவனங்களின் மார்ஜினில் சரிவினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பு
மொத்தத்தில் 2022ம் ஆண்டில் ஐடி நிறுவனங்களில் கடந்த ஆண்டினை போல தேவை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது சரியக் கூடும். இது நடப்பு ஆண்டில் பங்குதாரர்களுக்கு கொடுத்த லாபம், ஊழியர்களுக்கு கிடைத்த சம்பள உயர்வுகள் என்பது இந்த ஆண்டு அதே அளவு இருப்பது கடினமான ஒன்றாகத் தான் இருக்கின்றது. எனினும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை காட்டிலும் டிஜிட்டல் துறையில் நிச்சயம் ஒரு சீரான வளர்ச்சி என்பது இருக்கலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இத்துறையில் இருந்து வருகின்றது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications