இந்திய ஐடி நிறுவனங்களில் ஒரு வருடத்திற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருந்த போது ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தது மட்டும் அல்லாமல் ஒரு ஐடி ஊழியர் சர்வ சாதாரணமாக 2 முதல் 4 வேலைவாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு 120 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை பெற்று அசத்தி வந்தனர்.
ஆனால் நிலைமையே வேறு, ஐடி நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் பிரஷ்ஷர்களுக்கு கூட அடுத்த 6 மாதத்திற்கு வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது பெரும் சவாலாகவே இருக்கும்.

இந்தியாவில் முன்னணி staffing நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் படி முன்பு 100 வேலைவாய்ப்புகளுக்கு ஊழியர்கள் தேவை இருக்கும் இடத்தில் தற்போது வெறும் 25 - 30 ஊழியர்களுக்கு மட்டுமே டிமாண்டு உள்ளது. இதனால் staffing நிறுவனங்களின் வர்த்தகமும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
ஒருப்பக்கம் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும், செலவுகளை குறைக்கும் விதமாக டெக் ஊழியர்களின் பயிற்சிக்கு ஒதுக்கப்படும் தொகையை பெரிய அளவில் குறைத்துள்ள காரணத்தால் பிர்ஷ்ஷர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதேபோல் வர்த்தகம் குறைந்து வரும் வேளையில் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களை புதிய தொழில்நுட்படத்தில் பயிற்சி கொடுத்து பணியில் சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர்.
சில மாதங்கள் முன்பு வரையில் ஐடி நிறுவனங்கள் வெளியில் இருந்து ஊழியர்களை சேர்க்க மிகவும் ஆர்வமுடன் இருந்தனர், தற்போது ஊழியர்களின் utilisation அளவை மேம்படுத்தவும், பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து அனைத்து ஊழியர்களையும் Billable resource ஆக மாற்ற வேண்டும் என நோக்கத்தில் ஊழியர்களின் திறனை upskill செய்து வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஒரு ஊழியர் ராஜினாமா செய்துவிட்டால், இந்த இடத்தில் புதிய நபரை சேர்க்கும் பணிகளும் மிகவும் தாமதப்படுத்தபடுகிறது. இதிலும் முக்கியாமாக வெளியில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டுமெனில் கூடுதல் தாமதமாகிறது என டீம்லீஸ் தலைவர் சுனில் கூறுகிறார். ஐடி நிறுவனங்கள் அனைத்தும் சீப் சம்பளத்தில் ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 100 சதவீதம் சம்பள உயர்வு கொடுத்தாலும் மறுத்த ஊழியர்கள் தற்போது மிகவும் குறைந்த சம்பள உயர்வையே வழங்குகிறது. அப்படி அதிகப்படியான சம்பள உயர்வை கொடுத்தாலும் கொடுத்தாலும் நிறுவனம் குறித்து சந்தேகம் ஊழியர்களுக்கு எழுகிறது. இதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் வேறு நிறுவனங்களுக்கு மாறுவது குறித்த எண்ணம் இல்லை, இதனால் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அட்ரிஷன் விகிதம் குறைந்து வருகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications