இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் ஐடி துறையானது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இது இன்னும் அதிகரித்துள்ளது.
ஐடி துறையில் சுமார் 55% CIOs அதிகாரிகள், முழு நேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கார்ட்னர் இன்க் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இது குறிப்பாக தங்களது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த, ஆட்டோமேஷன், கிளவுட் மற்றும் அனலிஸ்டிக்ஸ் இயங்குதளங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தொலைதூர பணிகளுக்கான ஆதரவினையும் தெரிவித்துள்ளனர்.
சாதகமான தாக்கம்
கார்ட்னரின் ஆராய்ச்சி துணைத் தலைவர் மத்தேயு சார்லெட், ஐடி துறையில் கொரோனா சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 2020ன் மத்தியில் இருந்த தடுமாற்றம், அவநம்பிக்கை குறைந்து, தற்போது ஐடி துறையில் வளர்ச்சி மேம்பட ஆரம்பித்துள்ளது. மேலும் டிஜிட்டல் வளர்ச்சியினை மேம்படுத்துவது அவசியம். ஏனெனில் வணிக நடவடிக்கைகளில் ஆட்டோமேஷன் மற்றும் கிளவுட் சேவை என்பது அதிகரிக்கும்.
பணியமர்த்த விருப்பம்
ஆக இந்த காலக்கட்டத்தில் ஐடி துறையில் புதியதாக அதிக முழு நேர ஊழியர்களை பணியமர்த்த CIOs விரும்புகின்றனர். இதற்கு வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு மத்தியில் வாய்ப்புகள் அதிகம். எனிம் ரீமோட் ஒர்க், அனலிடிக்ஸ், கிளவுட் பிளாட்பார்ம், டேட்டா செண்டர், நெட்வொர்க் சிஸ்டம்ஸ் நிர்வாகம் மற்றும் அப்பிளிகேஷன்களின் பராமரிப்பு ஆகியவை கிளவுட் சேவையை நோக்கி மாறுவதால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைவதையும் காணலாம்.
ஒப்பந்தங்கள் அதிகரிப்பு
எப்படி இருப்பினும் ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளன. ஏனெனில் தற்போது டிஜிட்டல் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய பல ஒப்பந்தங்களை செய்துள்ளன. இதனால் தற்போது ஊழியர்களின் பணியமர்த்தலுக்க இது வழிவகுக்கும். குறிப்பாக டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்களுக்கு டிமாண்ட் அதிகரிக்கும்.
பணியமர்த்தல் அதிகரிக்கும்
ஆக கடந்த நிதியாண்டினை போலவே, நடப்பு நிதியாண்டிலும் ஐடி துறையில் பணியமர்த்தல் என்பது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அதோடு கடந்த ஆண்டினை போலவே, நடப்பு ஆண்டிலும் பணியமர்த்தல், சம்பள அதிகரிப்பு என பலவும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக ஐடி ஊழியர்களின் காலத்திற்கு ஏற்ப தங்களது டிஜிட்டல் திறனை மேம்படுத்திக் கொள்வது, நல்ல வாய்ப்புகளை அடைய வழிவகுக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications