ஐடி ஊழியர்களைப் பொட்டியை கட்ட தயாரா இருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2023 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் ஐஎம்எப் முதல் பல அமைப்புகள் கணித்துள்ளது மட்டும் அல்லாமல் பல நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஐடி ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது, ஒருபக்கம் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று முதலீட்டு சந்தையை ஆட்டம் காட்டி வரும் நிலையில் இந்தியாவில் எப்போது அதிகரிக்கும் என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது, இதனால் ஐடி ஊழியர்கள் பொட்டியை கட்ட தயாராகி வருகின்றனர்.

கர்நாடகா-வின் தலையெழுத்தை மாற்றிய எஸ்.எம்.கிருஷ்ணா.. ஐடி முதல் பயோடெக் வரை..! கர்நாடகா-வின் தலையெழுத்தை மாற்றிய எஸ்.எம்.கிருஷ்ணா.. ஐடி முதல் பயோடெக் வரை..!

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்தத் திடீர் ஆய்வுக்கு மிக முக்கியமான காரணம் கொரோனா தொற்று தான்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

சீனாவில் அதிகரித்து வருவது போல் இந்தியாவில் சில பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது, இந்த நிலையில் பல்வேறு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு மத்திய சுகாதாரத் துறை இந்தியாவுக்கு அடுத்த 40 நாள் மிகவும் முக்கியமான காலகட்டம், ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஹைப்ரிட் மாடல்

ஹைப்ரிட் மாடல்

இதனால் இந்தியாவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களைக் கட்டாயம் அலுவலகத்திற்கு வர உத்தரவிட்ட நிர்வாகம் அனைத்தும் ஹைப்ரிட் மாடலுக்கு மாற முடிவு செய்துள்ளது.

சிறப்புப் பொருளாதாரப் பகுதி

சிறப்புப் பொருளாதாரப் பகுதி

இதற்கிடையில் மத்திய அரசு சிறப்புப் பொருளாதாரப் பகுதியில் இருக்கும் அனைத்து ஐடி மற்றும் ஐடீஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற டிசம்பர் 31, 2023 வரையில் அனுமதி அளித்துள்ளது.

முழு நேர வொர்க் ப்ரம் ஹோம்

முழு நேர வொர்க் ப்ரம் ஹோம்

இதேவேளையில் வாரத்தில் 5 நாளும் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்ட ஐடி நிறுவனங்கள், டெக் சேவை நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது வாரத்தில் 2 அல்லது 3 நாள் வந்தால் மட்டும் போதும் என நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்கள் முழு நேர வொர்க் ப்ரம் ஹோம் சேவை அளிக்கத் தயாராகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT Companies reversing back-to-office plans; fresh Covid fears may bring WORK FROM HOME

IT Companies reversing back-to-office plans; fresh Covid fears may bring WORK FROM HOME
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X