கொரோனா பாதிப்புக் காரணமாக 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வருமான வரித்துறை நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் கால நீட்டிப்பு செய்துள்ளது.
இதனால் வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து விட்டு வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.
வருமான வரி தாக்கல்
இன்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யத் தனிநபர் பிரிவுக்கு 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 10, 2021 வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
முன்பு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்களுக்கான அவகாசம்
இதேபோல் நிறுவனங்களுக்கு 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய முன்பு ஜனவரி 31 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுப் பிப்ரவரி 12, 2021 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2 முக்கியத் தேதிகள்
பொதுவாக வருமான வரி தாக்கல் செய்வதற்கு வருமான வரித் துறை 2 தேதிகளை அறிவிக்கும் ஒன்று உரியத் தேதி (Due Date) மற்றொன்று கடைசித் தேதி (Last date).
ஆனால் மக்கள் உரியத் தேதியைத் தான் கடைசி நாளாகப் புரிந்துகொள்கின்றனர். அது முற்றிலும் தவறு வருமான வரியை அறிவிக்கப்பட்ட கடைசி நாள் வரையில், வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.
ஜனவரி 10, 2021
இந்த வகையில் 2019-20ஆம் நிதியாண்டுக்கும், 2020-21 கணக்கீடு ஆண்டுக்கும் வருமான வரி தாக்கல் செய்ய உரியத் தேதி (Due date) 10, ஜனவரி 2021. உரியத் தேதியில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாதவர்கள் கடைசி நாளான மார்ச் 31, 2021 வரையில் செலுத்தலாம்.
உரிமை இழப்பு
10, ஜனவரி 2021க்குள் செலுத்தத் தவறினால் நீங்கள் வர்த்தகத்திலோ அல்லது வீட்டுக் கடனில் ஏற்பட்ட நஷ்ட அளவீட்டை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லும் பெரிய உரிமையை இழந்திடுவீர். எனவே 31, டிசம்பர் 2020க்குள் வருமான வரி செலுத்துவது ஆகச் சிறந்தது.
இதேபோல் கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு உரியத் தேதிக்குள்ள செலுத்தவில்லை எனில் கூடுதல் வரிக்கான வட்டியைப் பெற முடியாது.
அபராதம் உண்டு
இவை அனைத்திற்கும் மேலாக 10, ஜனவரி 2021க்குப் பின் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைக்கு அபராதம் உண்டு. பொதுவாகத் தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைக்கு 5000 ரூபாய் அபராதத்தை வருமான வரித் துறை விதிக்கிறது.
10000 ரூபாய் அபராதம்
ஆனால் இந்த முறை 10, ஜனவரி 2021க்குப் பின் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கையில் 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இதேபோல் 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருந்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
பார்ம் 16 தேவையா?
வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி வருமான வரி தாக்கல் செய்யும் போது பார்ம் 16 தேவையா என்பது தான். கட்டாயம் தேவை என்பது இல்லை, ஆனால் பார்ம் 16 இருந்தால் எளிதாக வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியும்.
சரி பார்ம் 16 இல்லாமல் வருமான வரியை எப்படித் தாக்கல் செய்வது எப்படித் தெரியுமா..?
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications