உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எழுச்சியில் யார் எப்போது வேலையை இழக்க போகிறார்கள் என்று தெரியாமல் பீதியிலேயே இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தில் தனது உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க தயாராகி வருகிறது.
AI என்ன செய்துவிட முடியும் என பலரும் பேசிய நிலையில் இந்த மாத துவக்கத்தில் சர்வதசே அளவில் இயங்கி வரும் HR நிறுவனமான சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் வெளியிட்ட தனது மாதாந்திர அறிக்கையின் படி, இந்த ஆண்டு மே மாதத்தில் தோராயமாக 4000 பேர் தங்களுடைய வேலையை இழக்க செயற்கை நுண்ணறிவு (AI) காரணம் என அறிவித்துள்ளது.

இது வெளிநாட்டு நிறுவனம் தான், இந்தியாவில் இப்படி நடக்காது என நீங்கள் கூறினால், உங்களுக்காகவே சுட சுட ஒரு தகவல்-ஐ விப்ரோ நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவராக இருக்கும் சௌரப் கோவில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஐடி நிறுவனத்திலும் ஊழியர்களுக்கு பிரம்மிட் கட்டமைப்பு இருக்கும், இது அனைவருக்கும் தெரியும். இதில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் பிரஷ்ஷர்கள் மற்றும் அடிப்படை பணிகளை செய்பவர்கள், இது ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு அடுக்குகளிலும் அனுபவம், பதவி கொண்டு மாறுப்படும்.
இந்த நிலையில் அனைத்து துறையிலும் ஜெனரேட்டிவ் AI ஆதிக்கம் இருக்கும் வேளையில் ஐடி துறையில் மட்டும் வராதா என்ன.. சொல்லப்போனால் ஐடி துறை நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பதை உறுதி செய்கிறது விப்ரோ நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவராக இருக்கும் சௌரப் கோவில்.
சௌரப் கோவில் கொடுத்த பேட்டியில் ஜெனரேட்டிவ் AI வளர்ச்சி மூலம் நிறுவனத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் செய்யும் பல்வேறு அடிப்படை ஆய்வு பணிகளை இனி மெஷின் அதாவது AI தொழில்நுட்பம் வாயிலாக செய்யப்படும்.
இதன் மூலம் ஊழியர்கள் இனி இயந்திரங்கள் செய்ய முடியாத கடினமான பணிகளை செய்ய உட்படுத்தப்படுவார்கள். இதனால் ஊழியர்கள் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் சௌரப். இதில் என்ன இருக்கிறது என்றால் AI தொழில்நுட்பம் மூலம் கீழ் மட்டத்தில் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கைய எளிதாக குறைக்க முடியும்.
சமீபத்தில் தான் விப்ரோ புதிதாக சேரும் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்தது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதோடு நிற்காமல் சௌரப் கோவில் தான் தலைமை தாங்கும் HR துறைக்கு வரும் 80 சதவீத கோரிக்கைகள், கேள்விகள் அனைத்தையும் ஜெனரேட்டிவ் AI மூலம் இயங்கும் பாட் (BOT) எதிர்கொண்டு உரிய பதிலை-ஐ அளிக்கும் கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதனால் HR பிரிவில் இருக்கும் ஊழியர்களின் பணிகள் அடுத்த சில காலத்தில் பெரிய அளவில் குறைய உள்ளது, இதனால் ஹெச்ஆர் ஊழியர்கழ் இனி வரும் காலத்தில் அதிகளவில் மேனஜர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எப்படி டீம்-ஐ நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற பயிற்சி அளிக்கும் என விப்ரோ நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவராக இருக்கும் சௌரப் கோவில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications