ஐடி ஊழியர்களுக்கே இந்த நிலையா.. அங்கேயும் இனப்பாகுபாடா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பொதுவாக ஐடி துறையில் பணி நீக்கம் என்பது நீடித்து வரும் மந்த நிலை, பொருளாதார நெருக்கடி என பல பிரச்சனைகளால் தலை தூக்கி வருகின்றது. இதன் காரணாமாக

அவ்வப்போது பணி நீக்கம் என்பது இருந்து வருவது தான்.

இதுவே தற்போது உலகமே கொரோனாவால் முடங்கி போயுள்ள நிலையில் ஐடி துறையின் தேவையும் முடங்கியுள்ளது.

இதன் காரணமாக ஐடி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலையே நீடித்து வருகின்றது. இது இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க இவ்வாறு தான் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்.. ஊழியர்களுக்கு செக் வைத்த போயிங்..! 12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்.. ஊழியர்களுக்கு செக் வைத்த போயிங்..!

இதனால் பணி நீக்கமா?

இதனால் பணி நீக்கமா?

ஆனால் இனப்பாகுபாடால் ஐடி துறையில் பணி நீக்கம் செய்யப்படுமா என்றால்? அதனைத் தான் நம்ப முடியவில்லை. அமெரிக்காவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இந்த நிகழ்வு அரங்கேறி வருகின்றது. இதனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கடந்த வியாழக்கிழமையன்று, தான் இனப்பாகுபாடால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எதற்காக பணி நீக்கம்

எதற்காக பணி நீக்கம்

மேலும் 2016ம் ஆண்டு தான் நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிரிக்கா இனத்தினை சேர்ந்த அமெரிக்காரரான டாவினா லிங்குவிஸ்ட் சாட்சியம் அளித்தற்காக தான் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவர் 2017ம் ஆண்டு இன்ஃபொசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் மறுப்பு

இன்போசிஸ் மறுப்பு

ஆக இதன் காரணமாக தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் இனப்பாகுபாடு வழக்கு ஒன்றை எதிர்கொண்டுள்ளது. அதுமட்டும் அல்ல டாவினா லிங்குவிஸ்ட் தனக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இன்ஃபோசிஸ் தரப்பிலோ அப்படி இல்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் ஒரே கொள்கை

அனைவருக்கும் ஒரே கொள்கை

மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதாகவும், அனைத்து ஊழியர்களுக்கு ஒரே கொள்கை தான் எனவும் தெரிவித்துள்ளது. அது வேலை வாய்ப்பிலும் சரி, அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.

கருப்பினத்தவர் வழக்கு

கருப்பினத்தவர் வழக்கு

அமெரிக்காவின் மின்னபொலிஸ்னகரில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கொலை செய்யப்பட்டதாக அமெரிக்காவில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதன் காரணமாக அங்கு பெரும் போராட்டமே நடந்தது. இந்த நிறுவனத்தின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலை தூக்கி வரும் பிரச்சனை

தலை தூக்கி வரும் பிரச்சனை

கடந்த ஆண்டு இறுதியில் இதே போன்ற குற்றசாட்டுகள் விப்ரோ நிறுவனத்திலும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆக காலங்காலமாக அரங்கேறி வரும் இந்த குற்றச்சாட்டுகளால் பணி நீக்கம் என்பது தலைதூக்கி வருகிறது. தற்போதுள்ள நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு இதுவும் பெரும் பிரச்சனையாக அமையக்கூடும். ஏற்கனவே கொரோனாவால் பெரும் பிரச்சனைக்கு ஆளாகி வரும் நிலையில், தற்போது இது போன்ற பிரச்சனைகளும் தலை தூக்கி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT employees faces fresh race discrimination suit in US

IT major Infosys faces fresh race discrimination suit in US
Story first published: Sunday, June 14, 2020, 9:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X