இந்திய ஐடி துறையும், ஐடி ஊழியர்களும் அக்சென்சர் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்பு வந்த பின்பு சற்று பீதியில் தான் உள்ளனர். ஆனால் சந்தை நிலவரங்கள் படி பார்த்தால் அடுத்த 6 மாதத்திற்கு சர்வதேச ரெசிஷன் அச்சம் பெரிய அளவில் பாதிக்காது என்பதால் ஐடி நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வழிகளை மட்டுமே தேடி வரும் வேளையில் பெரிய அளவிலான பணிநீக்கத்தை யாரும் ஆதரிக்கவில்லை.
இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களில் தலைமை மாற்றம் இருக்கும் காரணத்தால் இவ்விரு நிறுவனங்களில் பெரிய அளவிலான பணிநீக்கம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் மற்ற நிறுவனங்களில் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியானால் இவ்விரு நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யும்.

இதேவேளையில் ரெசிஷன் அச்சம் அதிகமாகும் பட்சத்திலும் புதிய ப்ராஜெக்ட்கள் கிடைத்த பட்சத்தில் அக்சென்சர் நிறுவனத்தை போலவே அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அப்ரைசல் காலம் வந்துள்ளது, இந்த ஆண்டு அப்ரைசல் இருக்குமா..? அப்படி இருந்தால் சராசரியாக எவ்வளவு அப்ரைசல் கொடுக்கப்படும்..?
2024 ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள உயர்வு கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் ஐடி ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருந்த போது 60 முதல் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு கொடுத்து ஊழியர்களை பணியில் அமர்த்தியது.

இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் நிதி சுமையாக மாறியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு 8-10 சதவீதம் வரையில் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு சராசரியாக 10-11 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதைவிட முக்கியமாக இந்த ஆண்டு பெரும்பாலான ஐடி ஊழியர்கள் கணிக்கப்பட்டு உள்ள 8-10 சதவீத அளவீட்டில் குறைந்தபட்ச அளவான 8 சதவீத சம்பள உயர்வை தான் பெறுவார்கள் என ஹெச்ஆர் பிரிவு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்திய ஐடி துறையில் ரெசிஷன் அச்சம் காரணமாக 2021-22 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்த great resignation பிர்ச்சனை பெரிய அளவில் குறைந்து தற்போது அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனத்திலும் அட்ரிஷன் அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது, இது ஐடி நிறுவனங்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.

இதேபோல் 2023 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் அடுத்த சில நாட்களில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனகங்களும் வெளியிட உள்ள நிலையில் மார்ச் காலாண்டு முடிவில் BFSI பிரிவில் ஏற்பட்ட தடுமாற்றத்தின் மூலம் மந்தமான லாப அளவீடுகளை தான் ஐடி நிறுவனங்கள் வெளியிடும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் காலாண்டு முடிவுகளை அடிப்படையில் ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அளவை உறுதியாக கூறிவிட முடியும், இதேவேளையில் ஐடி சேவை நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளம் அளவில் பெரும் மாற்றத்தை இந்த ஆண்டு ஏற்படும் எனவும் கணிக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டுமா..? என்பதற்கான பதிலை கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications