இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஐடி துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் மற்ற துறையை சேர்ந்த நிறுவனங்களை காட்டிலும் ஐடி நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்குவதால் இன்றைய தலைமுறையினர் ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சிறந்த பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் போட்டி காரணமாக ஐடி நிறுவனங்களும் ஆண்டுதோறும் பணியாளர்களை சம்பளத்தை உயர்த்தி வருகின்றன.
மாறுபாடு
2020-21 முதல் 2023-24ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக் மகிந்திரா உள்ளிட்ட ஐடி துறையை சேர்ந்த நிறுவனங்கள் பணியாளர்களின் ஆண்டு சராசரி சம்பளத்தை 12 சதவீதம் முதல் 37 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கால கட்டத்தில், நிறுவனங்களுக்கு இடையே சம்பள உயர்வுகள் மாறுப்பட்டன. உதாரணமாக இந்திய நிறுவனங்கள் பணியாளர்களின் சராசரி சம்பளத்தை ரூ.1 லட்சம் முதல் ரூ.2.6 லட்சம் வரை அதிகரித்தன.

அதேசமயம், காக்னிசன்ட் மற்றும் ஆக்சென்ச்சர் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் ஊதியத்தை முறையே 1,600 டாலர் மற்றும் 3,200 டாலர் உயர்த்தியுள்ளன. இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் தனது பணியாளர்களின் சராசரி ஆண்டு சம்பளத்தை (2020-21 நிதியாண்டு) ரூ. 7 லட்சத்திலிருந்து சுமார் ரூ.10 லட்சமாக அதிகரித்துள்ளன. 2020-21ம் நிதியாண்டில் டெக் மகிந்திராவில் பணியாளர்களின் சராசரி சம்பளம் ரூ.5.3 லட்சமாக இருந்தது. இது 2023-24ம் நிதியாண்டில் ரூ.6.6 லட்சமாக அதிகரித்துள்ளது.
டிசிஎஸ்
கணக்கீடு காலத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாளர்களின் ஆண்டு சராசரி சம்பளம் 13,019 டாலரிலிருந்து 14,640 டாலராக உயர்ந்துள்ளது. ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாளர்களின் சராசரி சம்பளம் 18,821 டாலரிலிருந்து 22,106 டாலராக உயர்ந்துள்ளது. இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை பணியாளர்களின் சராசரி சம்பள உயர்வில் நிலையான சராசரி வளர்ச்சியை காட்டின. அதேசமயம், டெக் மகிந்திரா, காக்னிசன்ட் மற்றும் ஆக்சென்ச்சர் ஆகியவை மாறுபாடுகளை சந்தித்தன. டிசிஎஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஒட்டு மொத்த சரசாரி பணியாளர்களின் வருவாய் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடவில்லை.
ஐடி துறையின் ஊதிய உயர்வு குறித்து தொழில்நுட்ப வளர்ச்சி ஆலோசனை நிறுவனமான கேட்டலின்க்ஸ் நிறுவனத்தின் கூட்டாளியான ராம்குமார் ராமமூர்த்தி கூறுகையில், போட்டி தீவிரம், திறன் கலவை, பணியாளர்கள் வெளியேறுவது மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் செயல்பாடாகும் என்று தெரிவித்தார். உதாரணமாக ஒரு நிறுவனத்தில் அதிகளவில் பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறினால், அந்த நிறுவனம் பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ள சம்பளத்தை உயர்த்தும்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications