கூடிய விரைவில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் விப்ரோ, உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான Fresherகளை பணியில் அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளன. 2025 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 80 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 80 ஆயிரம் பேர் வேலைக்கு எடுக்கப்படுகின்றனர் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் மட்டும் 40 ஆயிரம் பேரை புதிதாக பணிக்கு எடுக்க இருப்பதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் புதிதாக 5,452 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 6,06,998 என உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டில் 20 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் இந்த 20,000 பேரையும் On Campus மற்றும் Off Campus என்ற இரண்டு வழிமுறைகளில் வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த நிலையில் தற்போது மீண்டும் வேலைக்கு ஆட்களை எடுக்கும் பணியை இன்போசிஸ் தொடங்கியுள்ளது நிறுவனம்.
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 2025ஆம் நிதியாண்டில் புதிதாக 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 10,000 பேரை வேலைக்கு எடுக்க போகிறோம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேவேளையில் தங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வரக்கூடிய ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை வழங்குவதிலும் ஹெச்சிஎல் தீவிரம் காட்டி வருகிறது .
விப்ரோ நிறுவனத்தைப் பொறுத்தவரை புதிதாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான Fresherகளை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. ஓராண்டு காலத்திற்குப் பிறகு விப்ரோ நிறுவனம் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக ஆட்களை வேலைக்கு எடுக்க உள்ளது.
தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கும் இலக்கினை அதிகரித்துள்ளதால் ஐடி துறை மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் இந்த நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களை அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications