இந்தியப் பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்ப (IT) துறை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தத் துறை வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மென்பொருள் ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்களிப்பைக் கொண்டு உள்ளது.
2022 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதாவது ஜிடிபி-யில் IT-BPM துறையின் பங்கு மட்டும் 7.4 சதவீதமாகும். இதேபோல் 2023 ஆம் நிதியாண்டில் IT மற்றும் BPM துறையின் மொத்த வருவாய் 245 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐடி துறையின் உள்நாட்டு வருவாய் 51 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி வருவாய் 2023 நிதியாண்டில் 194 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐடி துறை இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக இருப்பதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இந்தத் துறையின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் இந்தியாவுக்குத் தொடர்ந்து டாலர் வருமானத்தை அளிக்கும் ஒரு துறையாக உள்ளது.
இந்தியாவில் டெக்ஸ்டைல், உற்பத்தி துறைகளுக்கு முன்பே ஐடி துறை நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி துறையாக இருந்து வருகிறது. 2022-23ஆம் ஆண்டில் இந்தத் துறையின் மொத்த ஏற்றுமதி சுமார் 190 பில்லியன் டாலர்களாகும். இந்தத் துறை இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 15 சதவீதம் பங்களிப்பைக் கொண்டு உள்ளது.
ஐடி துறை டிஜிட்டல் மயமாக்கலை பணிகளை உலகம் முழுவதும் செய்து வருவது மட்டும் அல்லாமல், புதிய வணிக மாதிரிகளை உருவாக்கித் தொடர்ந்து டாலர் வருமானத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பெரிய பங்கீட்டை வகிக்கிறது. இதனால் ரூபாய் மதிப்பின் சரிவும் கட்டுக்குள் கொண்டு வரக் கணிசமாக உதவி செய்கிறது.
இதேவேளையில் உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கல் வேகமெடுத்து வருவதால், இந்திய ஐடி துறையின் தேவை அதிகரிக்கும். இதேவேளையில் புதிய தொழில்நுட்பங்களின் வருகை மூலம் புதிய டெக் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த ஜிடிபி அளவு 7.6% வளர்ச்சியைக் கண்டுள்ளது எனவும், இது பொருளாதார ஆய்வாளர்கள் கணித்ததை விடவும் அதிகம் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வியாழக்கிழமை அறிவித்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications