இந்தியாவின் ஐடி துறை வேலைவாய்ப்பு சந்தை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு, தொடக்க நிலை ஊழியர்கள் அதாவது பிரஷ்ஷர்களுக்கான தேவை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியேறி ஐடி துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் வருபவர்களுக்கு இந்த செய்தி கட்டாயம் பெரும் அதிர்ச்சியை அளிக்கக் கூடும். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இந்த வருடம் கேம்பஸ் இண்டர்வியூ செல்வதை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடிவு செய்துள்ளன.

ஐடி துறையில் கடந்த 6 மாதத்தில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், பிரஷ்ஷர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. மேலும் ஒட்டுமொத்த ஐடி துறையின் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அடுத்த சில மாதங்களுக்குப் பின்பே அதன் உண்மையான முகம் தெரியும்.
இந்த நிலையில் பிரபல ஆட்சேர்ப்பு நிறுவனமான TeamLease Services நிறுவனத்தின் தலைமை நிதியியல் இயக்குநர் ரமணி டாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டே கல்லூரி மாணவர்களை பணியில் அமர்த்தும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது.
ஐடி துறை நிறுவனங்கள் கடந்த ஆண்டு அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணியில் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, சம்பளம் குறைவாக கொண்ட பிரஷ்ஷர்களை கணிசமாக பணியில் அமர்த்தி பயிற்சி மற்றும் மேம்பாட்டில் அதிகம் முதலீடு செய்தது. இந்த ஐடியா கடந்த ஆண்டுக்கு வேலை செய்தது.
ஆனால் இந்த ஆண்டு பிரஷ்ஷர்கள் கூட வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என ரமணி டாத்தி கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளின் போக்குகளை விட பிரஷ்ஷர்களின் பணியமர்த்தல் குறைவாக இருக்கும். அது 50% குறைவாக இருக்குமா, 60% குறைவாக இருக்குமா என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக, இந்த ஆண்டு கல்லூரி மாணவர்களை பணியில் அமர்த்தும் எண்ணிக்கையில் குறைவு இருக்கும் என்று தற்போதைய சந்தை போக்குகள் தெரிவிக்கின்றன என்று ரமணி டாத்தி எச்சரித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) போன்ற சிறப்பு திறன் கொண்ட ஊழியர்களுக்கு சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் நேரத்தில், இதை நோக்கிய மாற்றத்தை பிரஷ்ஷர்ஸ் பாலோ செய்ய வேண்டும் என ரமணி டாத்தி வலியுறுத்தினார்.
ஐடி சேவை துறையில் தொடர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், உலகளாவிய வளர்ச்சி மையங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன, என்றாலும் அவை மெதுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். மாறிவரும் ஐடி வேலைவாய்ப்பு சூழலைச் சமாளிக்க தன்னார்வ திறன் மேம்பாடு அவசியமாக உள்ளது.
மேலும் ஐடி துறையில் தற்போது பல பணிகள் ஆட்டோமேட் செய்யப்படும் காரணத்தால் பிரஷ்ஷர்களின் அவசியம் பல இடத்தில் குறைந்து வருகிறது. இதனால் 2 ஆண்டு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் செய்யும் பணிகளை பிரஷ்ஷர்கள் செய்ய வேண்டும் என நிர்பந்தம் ஐடி நிறுவனங்கள் மத்தியில் உருவாகிறது.
இல்லையெனில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) போன்ற நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட, திறன் கொண்ட பிரஷ்ஷர்ஸை தேர்வு செய்ய விரும்புகின்றனர். இந்த நிலை ஸ்டார்ட்அப்-ல் இன்னும் மோசம் என்பது தான் இன்றைய சந்தை நிலவரம்.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications