இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் மாதத்தில்10 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் விதிமுறையை அமல்படுத்த "சிஸ்டம் இன்டர்வென்ஷன்" (System Intervention) என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிகளவிலான ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் தான் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனம் பெங்களூரை மையமாக வைத்து தான் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, சுமார் 323,000 ஊழியர்களை கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவமாக இன்போசிஸ் விளங்கிவருகிறது. இந்தநிலையில், பெங்களூர் இன்ஃபோசிஸில் நிறுவனம், மீண்டும் பணியாளர்களை அதிகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மாதத்திற்கு 10 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற விதிமுறையை நேற்று புதன்கிழமை அறிவித்தது.

இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு தலைவர்கள் (functional heads), மார்ச் 10 முதல் அமலாகும் வகையில், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதை ஆதரிக்கும் வகையில், மார்ச் 10, 2025 முதல், ஒவ்வொரு மாதமும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் சிஸ்டம் இன்டர்வென்ஷன் (System Interventions) அமல்படுத்தப்படும்.
இந்த நடவடிக்கைகள், ஊழியர்களுக்கான நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கும்போதே, புதிய ஹைபிரிட் வேலை முறையின் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் எந்த பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.
தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ள "சிஸ்டம் இன்டர்வென்ஷன்" என்பது, குழு உறுப்பினர்களுக்கிடையிலான சிறப்பான ஒத்துழைப்பை உறுதி செய்யவும், அதே நேரத்தில் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையையும் வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் மேலும், அந்த மின்னஞ்சலில், ஊழியர்கள் அறிந்ததுபோல், ஹைபிரிட் வேலை முறை ஊழியர்கள் மாதத்தில் குறைந்தது 10 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது அல்லது தொழில்துறை தேவைக்கேற்ப அதில் எது அதிகமோ அதனை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பு பணிநிலை 5 (JL5) மற்றும் அதற்குக் கீழான நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும். குழுத் தலைவர்கள் JL5 (Job Level 5) நிலையில் உள்ளனர். அதற்குக் கீழே உள்ளவர்களில் மென்பொருள் பொறியாளர்கள், மூத்த பொறியாளர்கள், கணினி பொறியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோர் அடங்குவர். JL6 மற்றும் அதற்குமேலான நிலைகளில் மேலாளர்கள், மூத்த மேலாளர்கள், டெலிவரி மேலாளர்கள், மூத்த டெலிவரி மேலாளர்கள் ஆகியோர் அடங்குவர், ஆனால் துணைத் தலைமை அதிகாரிகள் (Vice Presidents) இதில் சேர்ப்படமாட்டார்கள்.
இன்போசிஸ் ஊழியர்கள் தங்களின் வருகையை பதிவு செய்ய மொபைல் செயலியை பயன்படுத்துகின்றனர். இனிமேல், அது இயல்பாக (default) வீட்டில் இருந்து வேலை செய்யும் (WFH) கோரிக்கைகளை அங்கீகரிக்காது மற்றும் ஒவ்வொரு மாதமும் 10 நாட்கள் கட்டாயமாக அலுவலகத்திலேயே பணியாற்ற வருகைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரிவு தேவையைக் காட்டிலும் திட்டத்தின் (project) தேவையாக அதிகமாகும். இந்த நெகிழ்வுத்தன்மை பயண நேரத்தையும் அலுவலகத்திற்கு பயணம் செய்வதிலிருந்து ஏற்படும் சோர்வையும் மிச்சப்படுத்தவும், இது சில ஊழியர்களின் செயல்திறனைக் குறைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஒரு ஊழியர் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய குறைந்தபட்ச நாட்களை (work-from-office target) ஒன்று அல்லது இரண்டு நாட்கள் குறைவாக பூர்த்தி செய்தால், அந்த நாட்கள் அவரது விடுப்பு சமநிலையிலிருந்து (leave balance) கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்போசிஸின் முக்கிய போட்டியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது வாரத்திற்கு 5 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் கொள்கையை ஊழியர்களின் வேரியபிள் பே உடன் (variable pay) இணைத்துள்ளது.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட லாக்டவுன் தொழில்நுட்ப நிறுவனங்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் (WFH) சூழலுக்கு தள்ளியது. ஆனால், மந்தமான வணிக சூழல், ஊழியர்களின் பணிச்சூழல் சிக்கல்கள், குழு பணியமைப்பு கலாச்சாரத்தை (team-building) ஊக்குவிக்கும் நோக்கம் ஆகியவை, இன்போசிஸ் மற்றும் பிற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் கொள்கைகளை அமல்படுத்த வழிவகுத்தன.
இன்போசிஸ் நிறுவனம், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, மீண்டும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் (Return-to-Office) கொள்கையை அறிமுகப்படுத்தியது. வெளியான தகவலின்படி, இந்த ஆட்சேர்ப்பு நிறுவனம் (outsourcing giant) ஒவ்வொரு காலாண்டிலும் (quarter) சில முக்கிய வாரங்களை "In-Person Collab" வாரங்கள் என வகைப்படுத்தியது. இதில் அனைத்து குழு உறுப்பினர்களும் அலுவலகத்திற்கு வருகை புரிந்து ஒருவருடன் ஒருவர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இன்போசிஸின் போட்டியாளர் விப்ரோ தனது ஹைபிரிட் வேலை கொள்கையின் கீழ், ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் மேலும் ஒரு காலண்டர் ஆண்டில் கூடுதலாக 30 நாட்கள் தொலைதூர வேலை வசதியையும் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications