உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மந்த நிலை காரணமாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களுக்கான ஊதியச் சலுகைகள் 30 முதல் 40% வரை குறைந்துள்ளதாக தொழில்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இருந்த ஊதியச் சலுகைகள் தற்போது குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தொடரும் பணி நீக்கம்: தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்தவரை கடந்த ஓராண்டு காலத்தில் மைக்ரோசாப்ட் , கூகுள், அமேசான் மற்றும் மெட்டா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரிய அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.

சமீபத்திய நாஸ்டாக் அறிக்கையின்படி 2023 - 24 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறை 3.8% வளர்ச்சி அடையும் என கூறியுள்ளது. ஆனால் இது முந்தைய ஆண்டில் 8.1 % ஆக இருந்தது. எனவே இந்த மந்த நிலை காரணமாக ஊதியச் சலுகைகள் குறைந்துள்ளன.
ஊதியங்களை குறைக்கும் நிறுவனங்கள்: சில மாதங்களுக்கு முன்னரே இந்த போக்கு தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய அளவில் ஊதியம் வாங்கும் மூத்த தொழில்நுட்ப வல்லுனர்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே ஆட்களை பணி அமர்த்த ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் CXOக்கள் மற்றும் மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள், அவர்கள் பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என நிர்வாகிகள் தேடல் மற்றும் திறமை ஆலோசனை நிறுவனமான ஏபிசி கன்சல்டன்சியின் மூத்த அதிகாரி ரத்னா குப்தா கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி பெரும்பாலான நிறுவனங்களில் 30% வரை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப்களில் நல்ல வாய்ப்பு: ஆனால் நல்ல தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருக்கிறது, நாங்கள் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பலருக்கு வேலை வாங்கி தந்திருக்கிறோம் என ஐவி கேப் வென்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் விக்ரம் குப்தா கூறியுள்ளார்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்கள் தேர்வில் மிக கவனமாக இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஊதியம் சார்ந்த முடிவுகளை கவனமாக எடுக்க தொடங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கார்ன் ஃபெர்ரி இந்தியாவின் இயக்குநர் நவ்னீத் சிங், மூத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் பெரும்பாலும் ஸ்டார்ட் அப்களில் பணி அமர்த்தப்படுகின்றனர் என்றும், ஸ்டார்ட் அப்களில் முந்தைய ஊதியத்தை விட 30% குறைந்த ஊதியத்தில் பணியாற்ற கூட முன் வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications