IT ஊழியர்களுக்கு இது நல்ல விஷயமே.. பயப்படுற அளவுக்கு பிரச்சனை இல்லையாம்..!

உலகில் உள்ள பல துறைகளில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், ஐடி துறையில் அதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.

சொல்லப்போனால் ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டில் 2 முதல் 7 சதவீதம் வரை இழப்பினைக் காணலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த நிதியாண்டில் ஐடி துறையின் வளர்ச்சியானது 8.1 சதவீத வளர்ச்சியுடன் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இந்த வளர்ச்சி காணுமா என்ற சந்தேக நிலையே காணப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம்

கொரோனா வைரஸின் தாக்கம்

இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், கொரோனா வைரஸினால் எதிர்பார்க்கும் அளவு மோசமான தாக்கம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சந்தையில் சற்று திருத்தம் தொடங்குவதற்கு முன்பு டிசிஎஸ் பங்கின் விலையானது 2,200 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.

எதிர்பார்க்கும் அளவு பாதிக்காது

எதிர்பார்க்கும் அளவு பாதிக்காது

ஆனால் அதே மட்டத்தில் தற்போது இந்த பங்கின் விலையானது தற்போது உள்ளது. நிபுணர்கள் கூறிய படி கொரோனாவின் தாக்கமானது ஐடி துறையின் செயல்பாடுகளை பாதித்துள்ளது தான். இது ஜூன் காலாண்டில் அதன் எதிரொலி தெரியும். எனினும் கொரோனா வைரஸினால் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவு இருக்காது என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

வருவாய் குறையும்

வருவாய் குறையும்

இந்த நிலையில் இந்த வாரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கைகள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. டிசிஎஸ்ஸின் வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 5 சதவீதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நிபுணர்கள் எதிர்பார்க்கும் அளவு பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

சரிவினைக் காணும்

சரிவினைக் காணும்

முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை சற்று நிலை நிறுத்துவது நல்லது என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் அதன் வருவாய் சரிவினைக் காணலாம் என்று கூறியது. மேலும் இரண்டு காலாண்டுகளுக்கு டாலர் வருவாயில் நடுத்தர ஒற்றை இலக்க தொடர்ச்சியான சரிவினைக் காணும் என்றும் அறிவித்தது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் தான் டிசிஎஸ்ஸின் காலாண்டு அறிக்கை வெளியாக உள்ளது.

டிசிஎஸ் பங்கு விலை

டிசிஎஸ் பங்கு விலை

இந்த நிலையில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கு விலையானது, பிஎஸ்இ குறியீட்டில் இன்று தற்போது 66.70 ரூபாய் அதிகரித்து 2265.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 3 சதவீத ஏற்றமாகும். இதே என்எஸ்இ குறியீட்டிலும் 2.97 சதவீதம் இந்த பங்கின் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+