கொரோனா பாதிப்பு பலருக்குப் பல புதிய பாடங்களைக் கற்பித்துள்ளது, குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் செலவுகளைக் குறைக்கப் பல வழிகள் இந்த லாக்டவுன் காலத்தில் கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை.
கொரோனா எதிரொலியாக ஐடி நிறுவனங்கள், தங்களது வர்த்தகம் மற்றும் சேவை பாதிக்கக் கூடாது என்பதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்த முயற்சியில் பெரிய அளவிலான வெற்றியை நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கண்டுள்ளது.
இந்நிலையில் ஐடி நிறுவனங்கள் தற்போது ஐடி சேவை மற்றும் வர்த்தகம் மீதான வரி விதிப்புச் சட்டங்கள், தொழிலாளர் சட்டதிட்டங்களில் மாற்றம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐடி துறை
191 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் மே மாத துவக்கத்தில் அரசு அதிகாரிகளைச் சந்தித்து, கொரோனா பாதிப்பு முடிந்து இந்திய வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் இந்திய ஐடி துறையில் பணியாற்றும் 43 லட்சம் ஊழியர்களில் குறைந்தபட்சம் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உள்ளனர். இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தச் சட்டதிட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
நாஸ்காம்
இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்களின் பொது அமைப்பான நாஸ்காம், இதுகுறித்து விளக்கமான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் இவ்வறிக்கையைத் தொலைத்தொடர்பு மற்றும் ஊழியர்கள் அமைச்சகத்திற்கு அனுப்பித் தேவையான சட்ட விதிமுறைகளை மாற்ற அனுமதி கோர உள்ளது நாஸ்காம்.
பரவின் ராவ்
இந்திய ஐடி துறையில் அதிகளவிலான ஊழியர்களுக்கு நிரந்தரமாக (நீண்ட காலம்) Work From Home கொடுக்கப்படும் போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் Work From Home முறைக்குத் தற்போது தொழிலாளர் விதிகளில் இடமில்லை. எனவே அதை மாற்றியமைக்கவும் எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விதிகளை மாற்றம் செய்ய வேண்டும் என இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியும், நாஸ்காம் தலைவருமான யுபி. பிரிவின் ராவ் தெரிவித்துள்ளார்.
8 மணிநேரம்
இந்தியாவில் மட்டும் Work From Home பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஊழியர்கள் ஒரு நாளில் 8 மணிநேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும், இதை எப்படிக் கண்காணிப்பது எப்படி என்பது தான் தற்போதைய பிரச்சனை.
இதுகுறித்த முடிவை விரைவில் தொழிலாளர் அமைச்சகம் எடுக்கும் என எதிர்பார்க்கிறது.
பெண்கள்
Work From Home பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதிகளவிலான பெண்கள் நன்மை அடைவார்கள், குழந்தை மற்றும் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வேலையை விட்ட பெண்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். இதனால் 50:50 ஆண் பெண் விகிதம் இந்திய ஐடி துறையில் சாத்தியப்படுத்த முடியும்.
பிரச்சனை
அதிகமான ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் காரணத்தால் குறைவான சம்பளத்தில் அதிகளவிலான ஊழியர்கள் பணியாற்றச் சந்தையில் ஆள் கிடைக்கும் இதனால் சராசரி சம்பள அளவீடுகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் சம்பள உயர்வின் அளவுகள் குறையவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் அதிகப்படியானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது மிகவும் நல்ல விஷயம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications