ஐடி பங்கு சரிவு ஓவர் ரியாக்சன்.. உண்மை என்னவென்றால்..? விளக்கும் ஆனந்த்..!!

இந்திய பங்குச்சந்தையில் கடந்த 10 நாட்களாக ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தில் Nifty IT இன்டெக்ஸ் 4%க்கும் மேல் சரிந்து 4 மாத குறைந்த அளவை எட்டியது. மேலும் ஒரே நாளில் IT நிறுவனங்களின் மதிப்பு சுமார் ரூ.1.3 லட்சம் கோடி குறைந்ததுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

ஐடி பங்கு சரிவு ஓவர் ரியாக்சன்.. உண்மை என்னவென்றால்..? விளக்கும் ஆனந்த்..!!

முதலீட்டாளர்கள் "AI வந்துவிட்டால் ஐடி துறை அழிந்துவிடும்" என்ற அச்சத்தில் பங்குகளை விற்று வருகின்றனர். ஆனால் IME கேப்பிட்டல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆஷி ஆனந்த் இதை "அதிகப்படியான பயம்" என்று கூறுகிறார்.

AI அழிவு அல்ல - மாற்றம் மட்டுமே
ஆஷி ஆனந்த் கூறுகையில் ஈடி நவ்-க்கு அளித்த பேட்டியில், AI நிச்சயம் ஐடி நிறுவனங்களின் பணியாற்றும் முறையை மாற்றும். ஆனால் அது முழு துறையையும் அழிக்காது. தற்போது பெரிய அளவிலான ஊழியர்கள் தேவைப்படும் பணிகளை AI கருவிகள் வேகமாகவும், குறைந்த ஆட்களுடனும் முடிக்கும் திறனை பெறும். இதனால் ஒரு திட்டத்தை முடிக்க குறைவான செலவு ஆகும். இதை அவர் வெறும் "வருவாய் குறைவு" (revenue deflation) என்று அழைக்கிறார்.

வருவாய் குறைந்தாலும் லாபம் அதிகரிக்கும்
வருவாய் சற்று குறைந்தாலும் லாபம் குறைய வேண்டிய அவசியமில்லை என்று ஆஷி ஆனந்த் விளக்குகிறார். ஊழியர் எண்ணிக்கை குறைவதால் செலவு பெருமளவு குறையும். இதனால் லாப வீதம் (profit margin) உயரும். வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் கொடுத்தாலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் நிலையாகவோ அல்லது சற்று உயர்ந்தோ இருக்கும் என ஆஷி ஆனந்த் கூறுகிறார்.

ஐடி பங்கு சரிவு ஓவர் ரியாக்சன்.. உண்மை என்னவென்றால்..? விளக்கும் ஆனந்த்..!!

தமிழ்நாடு ஐடி துறைக்கு நல்ல செய்தி..?
தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய ஐடி மையங்களில் ஒன்றாக இருக்கும் வேளையில் ஏஐ மூலம் இத்துறையில் வரும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கத தாக்கத்தை ஐடி சேவை துறையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் TCS, Infosys, Wipro, HCL Tech போன்ற நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

AI வந்தாலும் பெரிய அளவிலான பணிநீக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்று ஆஷி ஆனந்த் நம்பிக்கை தருகிறார். ஏனெனில் AI காரணமாக ஒரு ஊழியர் முன்பை விட அதிக வேலை செய்ய முடியும். இதனால் நிறுவனங்கள் அதிக திட்டங்களை எடுத்துக்கொள்ளலாம். ஊழியர் பற்றாக்குறை பிரச்சினை தீரும். தமிழ்நாட்டு ஐடி ஊழியர்களுக்கு AI திறன்களை கற்றுக்கொண்டால் வேலை பாதுகாப்பு அதிகரிக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஐடி பங்கு சரிவு ஓவர் ரியாக்சன்.. உண்மை என்னவென்றால்..? விளக்கும் ஆனந்த்..!!

குறுகிய காலத்தில் லாபம் பாதிக்கப்படாது
இதேபோல் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தால் குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ஐடி நிறுவனங்களின் லாபம் பெரிதாக பாதிக்கப்படாது என்று ஆஷி ஆனந்த் கூறுகிறார். உலகெங்கும் தொழில்நுட்ப செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. AI வந்தாலும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

பங்கு விலைகள் சரிந்துள்ள நிலையில், புதிதாக முதலீடு செய்துள்ளவர்களுக்கு சாதகமாக மதிப்பீடுகள் (valuations) இப்போது குறைந்துள்ளன. இதனால் ஏஐ துறையில் வளர்ச்சி அடையும் ஐடி நிறுவன பங்குகள் சரிவில் இருந்து வேகமாகவும், அதிகமாகவும் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.

ஐடி பங்கு சரிவு ஓவர் ரியாக்சன்.. உண்மை என்னவென்றால்..? விளக்கும் ஆனந்த்..!!

எதிர்கால ஐடி துறை
ஐடி நிறுவனங்கள் AI-ஐ தங்கள் சேவையில் இணைத்து புதிய AI அடிப்படையிலான சேவைகளை உருவாக்கினால், துறை இன்னும் வலுவடையும் என்று ஆஷி ஆனந்த் நம்பிக்கை தருகிறார். தமிழ்நாட்டு இளைஞர்கள் AI திறன்களை விரைவாக கற்றுக்கொண்டு தயாராகினால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த சரிவு தற்காலிக பயம் மட்டுமே - நீண்டகாலத்தில் ஐடி துறைக்கு பெரும் வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+