சென்னை: இந்திய பங்குச்சந்தையில் கடந்த ஒரு வருடமாக ஐடி பங்குகள் பெரும் சரிவை சந்தித்துக்கொண்டு இருந்த நிலையில், இன்று திடீரென அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் உயர்ந்துள்ளது. இதனால் பல முதலீட்டாளர்கள் ஐடி பங்குகளில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரமா என்று யோசிக்கும் அளவுக்கு சூழல் உருவாகியுள்ளது.
இன்று ஐடி பங்குகள் உயர என்ன காரணம்..? தொடர்ந்து ஐடி பங்குகள் உயர்வுடனே இருக்குமா..? இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 965 புள்ளிகள் உயர்ந்து 78151.45 புள்ளிகளுக்கு முடிந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 262 புள்ளிகள் உயர்ந்து 245,334.30 புள்ளிகளை எட்டியுள்ளது. மறுமுனையில் நிஃப்டி மிட்கேப் பங்குகள் 0.41 சதவீதம் சரிந்துள்ளது, ஸ்மால்கேப் 100 குறியீடு 0.21 சதவீதம் வரையில் சரிந்து காணப்பட்டது.
இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் உயர்ந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 85 டாலருக்கு சென்றுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் வெள்ளிகிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை தலா3 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து டிசிஎஸ், பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ், மெப்சிஸ், எல்டிஐமைண்ட்டிரீ ஆகியவை உயர்வடைந்த ஐடி சேவை நிறுவன பங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சரி ஐடி பங்குகள் ஏன் உயர்ந்துள்ளது..?
ஐடி பங்குகள் திடீரென உயர முக்கியமான காரணம் காலாண்டு முடிவுகள் தான், கடந்த 6-7 நாட்களாக இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில் முக்கியமாக பெரும்பாலான நிறுவனங்கள் சந்தை கணிப்பிற்கு இணையாகவும், சில நிறுவனங்கள் அதிகமான லாபம், வருவாயை பதிவு செய்துள்ள காரணத்தால் ஐடி துறை மீதான நம்பிக்கை மீண்டும் முதலீட்டாளர்களுக்கு பிறந்துள்ளது.
இதேநேரத்தில் ஏஐ மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் ஜூன் காலாண்டு முடிவுகளை பார்க்கும் போது ஒவ்வொரு ஐடி சேவை நிறுவனமும் புதிதாக பெற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுகிறது.
இதுதான் இத்துறை மீது நம்பிக்கை பிறக்க முக்கியமான காரணமாக உள்ளது. அனைத்தையும் விட முக்கியமாக ஆர்பிஐ ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்த காரணத்தால் டாலர் வருமானம் பெறும் ஐடி நிறுவனங்களுக்கு இது பெரும் ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications