அமெரிக்கா : தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவானாக கருதப்படும் ஜெகதீஷ் மித்ரா ஜெனரேட்டிவ் ஏஐ அடிப்படையிலான ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 முதல் 1000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க இருக்கிறது.
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் இந்தியாவின் பிசினஸ் பிரிவு தலைவராக பணியாற்றி வந்தவர் தான் ஜெகதீஸ் மித்ரா. இவர் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜெனரேட்டிவ் ஏஐ அடிப்படையில் செயல்படும் SaaS நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்கு ஹியூமனைஸ் Humanize என அவர் பெயர் சூட்டி உள்ளார்.

இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெக் மஹிந்திராவில் இருந்து வேலையை ராஜினாமா செய்தார். இவர் தற்போது Humanize என்ற software-as-a-services எனப்படும் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் ஸ்டார்ட்அப்-ஐ தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஜெகதீஷ் மித்ரா செயற்கை நுண்ணறிவின் திறனை எளிமையாக பயன்படுத்தும் வகையில் தற்போது நல்ல தரவு அமைப்பு கொண்ட நடைமுறை இல்லாமல் இருப்பதுதான் பல்வேறு தொழில்களுக்கும் பிரச்சினையாக இருக்கிறது.
எனவே Humanize நிறுவனத்தில் இதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளித்திருக்கிறோம் என கூறியுள்ளார். Humanize நிறுவனம் ஜெனரேட்டிவ் கிட் என்பதை உருவாக்க இருப்பதாகவும் இதன் மூலம் சாஸ் தளங்கள் 15 முதல் 25 சதவீதம் வரை வேகமாக செயல்பட கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மென்பொருட்களை ஒரு சேவை தொழில்நுட்பமாக எடுத்துக்கொண்டு அத்துடன் செயற்கை நுண்ணறிவின் நுட்பங்களையும் சேர்க்க இருக்கிறோம். இதன் காரணமாக வேலைப்பளு கணிசமான அளவு குறையும் என அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்புதான் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்த சிபி குருநாணி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு நிறுவனத்தை தொடங்கினார் . அவரைப் பின்பற்றி தற்போது ஜெகதீஷ் மித்ராவும் ஸ்டார்ட் அப்பை தொடங்கியுள்ளார். அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் Humanize நிறுவனம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
மித்ரா தங்கள் நிறுவனத்தின் இலக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா என கூறுகிறார். குறிப்பாக ஜிசிசி மையங்களே தங்கள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு என தெரிவித்துள்ளார். நீண்ட கால அடிப்படையில் தென்கிழக்கு ஆசியா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை இலக்காகக் கொண்டு நாங்கள் செயல்படுவோம் என கூறியுள்ளார்.
Humanize நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுபவம், விநியோக சங்கிலி மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்றினை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் எனக் கூறியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவிலும் தனது அலுவலகத்தை திறந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications