இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான ஐடிசி தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 14.9 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சோலார் பவர் பிளாண்ட்-ஐ உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் துவங்கப்பட்டு உள்ள புதிய சோலார் பவர் பிளான்ட் சுமார் 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் தமிழ்நாட்டு வர்த்தகத்திற்குத் தேவையான மொத்த மின்சாரத்தில் 90 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
100 சதவீத மின்சாரம்
மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்திற்குச் சேவையான 100 சதவீத மின்சாரத்தையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளாக ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்
ஐடிசி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைத்துள்ள இப்புதிய சோலார் பவர் பிளாண்ட் சுமார் 59 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்தச் சோலார் தளத்தின் மூலம் வருடத்திற்கு 22.2 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
ஐடிசி தமிழ்நாடு
இது தமிழ்நாட்டில் உள்ள ஐடிசி ஹோட்டல், உணவு உற்பத்தி தொழிற்சாலை, பேப்பர் உற்பத்தி தொழிற்சாலை, பிரின்டிங் மற்றும் பேகேஜிங் தொழிற்சாலையின் மின்சாரச் சேலையைப் பூர்த்திச் செய்யும் என எதிர்பார்ப்பதாக ஐடிசி தெரிவித்துள்ளது.
காற்றாலை, சோலார்
ஐடிசி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க அற்றல் பிரிவில் 138 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 14 மெகாவாட் சோலார் பவர் பிளான்ட், 53 மெகாவாட் சோலார் தளம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
பயோமாஸ் பாய்லர்
மேலும் ஐடிசி தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி தளத்தை வைத்துள்ளது. சமீபத்தில் ஐடிசி நிறுவனம் மின்சார உற்பத்திக்காகப் பயோமாஸ் பாய்லர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.
இதுவரை ஐடிசி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்திக்காகச் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது.
1000 கோடி ரூபாய்
ஐடிசி நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, பீகார், ஹரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 20 தொழிற்சாலை, 9 ஹோட்டல், 6 அலுவலகக் கட்டிடங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications