தமிழ்நாட்டில் புதிய சோலார் பவர் பிளான்ட்.. ITC நிறுவனம் மாஸ்..!

இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான ஐடிசி தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 14.9 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சோலார் பவர் பிளாண்ட்-ஐ உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் துவங்கப்பட்டு உள்ள புதிய சோலார் பவர் பிளான்ட் சுமார் 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் தமிழ்நாட்டு வர்த்தகத்திற்குத் தேவையான மொத்த மின்சாரத்தில் 90 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

100 சதவீத மின்சாரம்

100 சதவீத மின்சாரம்

மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்திற்குச் சேவையான 100 சதவீத மின்சாரத்தையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளாக ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

ஐடிசி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைத்துள்ள இப்புதிய சோலார் பவர் பிளாண்ட் சுமார் 59 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்தச் சோலார் தளத்தின் மூலம் வருடத்திற்கு 22.2 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும்.

ஐடிசி தமிழ்நாடு

ஐடிசி தமிழ்நாடு

இது தமிழ்நாட்டில் உள்ள ஐடிசி ஹோட்டல், உணவு உற்பத்தி தொழிற்சாலை, பேப்பர் உற்பத்தி தொழிற்சாலை, பிரின்டிங் மற்றும் பேகேஜிங் தொழிற்சாலையின் மின்சாரச் சேலையைப் பூர்த்திச் செய்யும் என எதிர்பார்ப்பதாக ஐடிசி தெரிவித்துள்ளது.

காற்றாலை, சோலார்

காற்றாலை, சோலார்

ஐடிசி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க அற்றல் பிரிவில் 138 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 14 மெகாவாட் சோலார் பவர் பிளான்ட், 53 மெகாவாட் சோலார் தளம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

பயோமாஸ் பாய்லர்

பயோமாஸ் பாய்லர்


மேலும் ஐடிசி தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி தளத்தை வைத்துள்ளது. சமீபத்தில் ஐடிசி நிறுவனம் மின்சார உற்பத்திக்காகப் பயோமாஸ் பாய்லர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.

இதுவரை ஐடிசி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்திக்காகச் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது.

1000 கோடி ரூபாய்

1000 கோடி ரூபாய்

ஐடிசி நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, பீகார், ஹரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 20 தொழிற்சாலை, 9 ஹோட்டல், 6 அலுவலகக் கட்டிடங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+