இந்தியாவின் முன்ணணி நிறுவனங்களில் ஓன்றான ஐடிசி பங்குதாரர்கள், ஹோட்டல் வணிகத்தைத் தனி நிறுவனமாகப் பிரிக்கும் முக்கியமான Demerger திட்டத்திற்கு ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பான்மையான பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) உத்தரவைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற ITC பங்குதாரர்கள் கூட்டத்தில், 99.6% பங்குதாரர்கள் ஹோட்டல் வணிகத்தை ஐடிசி ஹோட்டல்ஸ் லிமிடெட் என்ற தனி நிறுவனமாகப் பிரிப்பதற்கான தீர்மானத்திற்குப் பச்சை கொடி காட்டியுள்ளனர்.

இந்த ஒப்புதலுடன், செபி உட்படப் பிற முக்கியமான ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதிகளைப் பெற்ற பிறகு, இந்த ஆண்டுக்குள் ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குச்சந்தையில் தனி நிறுவனமாக பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் இருந்து நிதி சேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாக பிரித்து பட்டியலிடப்பட்டதில் இருந்து பல நிறுவனங்கள் டிமெர்ஜர் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஐடிசி நிறுவனம் இந்த டிமெர்ஜர் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, ஐடிசி பங்குதாரர்கள் தங்கள் பங்குகளில் ஒவ்வொரு 10 பங்குகளுக்கும், பிரிக்கப்படும் ஹோட்டல் வணிகத்தில் 1 பங்கு வழங்கப்படும்.
அண்மையில், இந்திய போட்டித்திறன் ஆணையம் (CCI) ஹோட்டல் வணிகத்தைப் பிரிப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. ஹோட்டல் வணிகம் தனி நிறுவனமாகப் பட்டியலிடப்பட்ட பிறகு, ஐடிசி நிறுவனம் அதில் 40% பங்குகளை வைத்திருக்கும். மீதமுள்ள 60% பங்குகள் ஐடிசி பங்குதாரர்களுக்குக் கிடைக்கும்.
பங்கு வழங்கப்படும் விகிதம், இரு நிறுவனங்களின் பங்கு மூலதனம் அல்லது பங்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இது ஐடிசி ஹோட்டல்-ன் சந்தை மதிப்பீட்டை எந்த வகையிலும் பாதிக்காது.
இந்த ஹோட்டல் வர்த்தகத்தைத் தனி நிறுவனமாகப் பிரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐடிசி ஹோட்டல்ஸுக்கு "ஐடிசி" என்ற பிராண்ட் பெயரை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டாலும் இதற்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
புகையிலை முதல் நுகர்பொருள் வரை பல்வேறு துறைகளில் செயல்படும் இந்தப் பன்முக நிறுவனமான ஐடிசி, தனது ஹோட்டல் வணிகம் கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையில் தனி நிறுவனமாக இயங்குவதற்குத் தயாராக இயங்கும் நம்பிக்கை இருக்கும் காரணத்தாலே தற்போது ஐடிசி-யில் இருந்து ஐடிசி ஹோட்டல்ஸ் பிரிவு தனியாக பிரிகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications