வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், காலக்கெடுவுக்குப் பிறகு ITR தாக்கல் செய்பவர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்பதை தனிநபர்கள் அறிந்திருக்க வேண்டும். 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும். தனிநபர்கள் ஜூலை 31 காலக்கெடுவைத் தவறவிட்டால், அவர்கள் டிசம்பர் 31, 2024-க்குள் தாமதமாகத் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
பின் விளைவுகளில் இருந்து தப்பிக்க வருமான வரித்துறை குறிப்பிட்ட இந்த காலக்கெடுவுக்குள் ITR தாக்கல் செய்வது முக்கியமாகும். அனைவருமே தங்களுடைய வாழ்க்கையில் பிஸியாக ஓடிக் கொண்டிருப்பதால், சில நேரங்களில் இந்த காலக்கெடு மறந்து போகலாம். சிலர் அதனைத் தவற விடலாம். எனவே உங்கள் மொபைல் போனில் ரிமைண்டர் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தி ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

ஜூலை 31-ஆம் தேதியை தவற விடுபவர்கள், அதே மதிப்பீட்டு ஆண்டின் படி, அதாவது 2024 முதல் 2005 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் ITR தாக்கல் செய்யலாம். இதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் கூட, விதிகளுக்கு இணங்காமல் அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவதை விட தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வது சிறந்தது.
புதிய வரி முறை: வருமான வரியைக் காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யத் தவறினால், நீங்கள் தானாகவே புதிய வரி விதிமுறைக்குள் கொண்டுவரப்படுவீர்கள். அந்த நிதியாண்டுக்கான பழைய வரி விதிமுறையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை இழப்பீர்கள். தாமதமாக ITR தாக்கல் செய்வது, ஒரு நபரை புதிய வரி விதிமுறைக்குள் கொண்டுவரும்.
வருமான வரி தாக்கல் செய்யும் போது வரி முறையைத் தேர்வு செய்யும் உரிமை வரி செலுத்துவோருக்கு உண்டு. வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்த காலக்கெடுவுக்கு மேல் வருமான வரி செலுத்தும் போது தாமாக தேர்வு செய்யவும் வரி முறையில் பிரச்சனை ஏற்படலாம்.
2023 முதல் 2024 நிதியாண்டில், ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிலுவைத் தேதிக்குள் உங்கள் ITR-ஐத் தாக்கல் செய்யத் தவறினால், தாமதமாக ITR தாக்கல் செய்ய உங்களுக்கு விருப்பம் உள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F-இன் படி, தாமதமாக தாக்கல் செய்வதற்கு கட்டணமாக ரூ. 5000 வசூலிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், தாமதமாக ITR தாக்கல் செய்யும் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செக்சன் 271H இன் கீழ் அபராதம்: பிரிவு 234E இன் கீழ் தாமதமாக, குறிப்பிட்ட தேதிக்குள் TCS அல்லது TDS பைலிங் செய்ய முடியாத நபர்கள் ரூ. 10,000 முதல் ரூ. 1,00,000 வரை அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம்.
தேவையற்ற விளைவுகளை குறைப்பதற்கும் அபராதங்களில் இருந்து விடுபடவும், வருமானவரித்துறையின் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ITR தாக்கல் செய்வது சாலச்சிறந்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications