ஜூன்- ஜூலை வந்துவிட்டாலே மாத சம்பளக்காரர்கள் அனைவரும் பரபரப்பாக வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் பணிகளைத் துவங்கிவிடுவார்கள். இந்த முறை வருமான வரி தாக்கல் செய்யும் ஈபைலிங் தளத்தில் 11க்கும் அதிகமாகத் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து மக்கள் சமூகவலைத்தளத்தில் வருமான வரி துறையை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளனர். இது மட்டும் அல்லாமல் இன்னும் சிலர் வருமான வரி தளத்தை உருவாக்கி இன்போசிஸ் மற்றும் அதன் நிறுவனர் நாராயண மூர்த்தியை டேக் செய்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான கடமை என்பதை உணர வேண்டும். மாத சம்பளக்காரர்கள் ஒரு நிதியாண்டில் ஈட்டிய வருமானத்தைக் கணக்கிட்டு உரிய காலக்கெடுவுக்குள், அரசு வரி செலுத்த வேண்டும். இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்பதால், தாமதமின்றி வருமான வரி தாக்கல் செய்வது உத்தமம்.
இதேவேளையில் வருமான வரித்துறையின், வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடர்ந்து மெசேஜ் மூலம் மாத சம்பளக்காரர்களுக்கு நினைவூட்டி வருவது, பாராட்டத்தக்க விஷயமாகும்.
2023-24 நிதியாண்டுக்கான (கணக்கீட்டு ஆண்டு 2024-25) வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் ஜூலை 31, 2024 ஆகும். ஆனால் இந்த வருமான வரி அறிக்கையைத் தாமதமாகத் தாக்கல் செய்ய விரும்புபவர்கள் டிசம்பர் 31, 2024 வரை தாக்கல் செய்ய மத்திய வருமான வரி அனுமதிக்கிறது.
ஆனால், ஜூலை 31-க்கு பின்பு தாக்கல் செய்யும் போது அபராத தொகையுடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஜூலை 31-க்கு பின்பு தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான அபராதம் தொகையை தெரிந்துகொண்டு முன்கூட்டியே தாக்கல் செய்வது தான் சரியானதாக இருக்கும்.
தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் விதிக்கப்படும் அபராதம் ஒருவரின் வருமானத்தைப் பொறுத்து மாறுபடும். 2023-24 நிதியாண்டிற்கான (கணக்கீட்டு ஆண்டு 2024-25) நிகர வரி வருமானம் ரூ.5 லட்சத்தை விட அதிகமாக உள்ளவர்கள் தாமதமாகத் தாக்கல் செய்தால் அதிகபட்சமாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
நிகர வரி வருமானம் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு குறைவாக உள்ளவர்களுக்கு தாமதமாக தாக்கல் செய்தால் அதிகபட்சமாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரி விதிகள்படி அடிப்படை வரி விலக்கு வரம்பிற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், வரி ரீபண்ட் தொகையை திரும்பப் பெற வரி அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டுமே கிடைக்கும். இப்பிரிவினர் தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படமாட்டாது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications