வருமான வரி தாக்கல் 2026-27: கடைசி நேர அபராதத்தைத் தவிர்க்க, இந்த மாற்றங்களை உடனே கவனியுங்கள்!

2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தாக்கல் (ITR) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது. மே 15, 2026 முதல் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் ஆன்லைன் மூலமாகவும், எக்செல் (Excel) வசதி மூலமாகவும் தாக்கல் செய்யலாம். சம்பளம் பெறுவோர், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், இந்த முறை முன்கூட்டியே வரித் தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2026-27 நிதியாண்டில் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை யாரெல்லாம் தாக்கல் செய்யலாம்?

'சஹாஜ்' (Sahaj) என்று அழைக்கப்படும் ITR-1 படிவம், ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் சம்பளம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கானது. இதில் சம்பளம், ஒரு வீட்டுச் சொத்து மற்றும் வட்டி போன்ற இதர வருமானங்கள் அடங்கும். ஆனால், நீங்கள் ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவோ, பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருந்தாலோ அல்லது வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருந்தாலோ இந்தப் படிவத்தைப் பயன்படுத்த முடியாது.

வருமான வரி தாக்கல் 2026-27: முக்கிய மாற்றங்கள்

'சுகம்' (Sugam) என்று அழைக்கப்படும் ITR-4 படிவம், உத்தேச வரித் திட்டத்தைத் (Presumptive Taxation) தேர்ந்தெடுக்கும் தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUF) மற்றும் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கானது (LLP தவிர்த்து). இவர்களது வருமானமும் 50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்கள் உள்ளவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பவர்கள் அல்லது மூலதன ஆதாயம் (Capital Gains) பெறுபவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த முடியாது.

ITR-1 மற்றும் ITR-4 படிவங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

இந்த வரித் தாக்கல் சீசனில் வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு (2025-26 வரை) ITR-1 மற்றும் ITR-4 படிவங்களில் ஒரு வீட்டுச் சொத்தை மட்டுமே காட்ட முடிந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தால் ITR-2 தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, இரண்டு வீட்டுச் சொத்துக்கள் வரை இந்தப் படிவங்களிலேயே காட்டலாம். அதேபோல், பிரிவு 112A-ன் கீழ் 1.25 லட்சம் ரூபாய் வரை நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG) ஈட்டியவர்கள், முந்தைய நஷ்டங்கள் ஏதும் இல்லையென்றால் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களையே பயன்படுத்தலாம்.

சிறு வணிகர்களுக்கான வெளிப்படைத்தன்மை விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2026-27 மதிப்பீட்டு ஆண்டில் ITR-4 தாக்கல் செய்யும் வரி செலுத்துவோர், தங்கள் வங்கி இருப்பு விவரங்களைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது. உத்தேச வரித் திட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் மார்ச் 31, 2026 வரை தாங்கள் செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி இருப்பு போன்ற முக்கிய விவரங்களை படிவத்தின் 'நிதி விவரங்கள்' (Financial Particulars) பகுதியில் குறிப்பிட வேண்டும்.

நன்கொடைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதி குறித்த விவரங்களிலும் கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. பிரிவு 80GGC-ன் கீழ் வரி விலக்கு கோருபவர்கள், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் பெயர் மற்றும் PAN எண்ணைக் குறிப்பிட வேண்டும். 80G பிரிவின் கீழ் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு UPI, செக், IMPS, NEFT அல்லது RTGS போன்ற பரிவர்த்தனை எண்கள் மற்றும் வங்கியின் IFSC கோடு ஆகியவற்றை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வரிச் சலுகை கோருவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் புதிய வரி விலக்கு சலுகைகள்

ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வருமான வரிச் சட்டம் 2025, வரி நடைமுறைகளை எளிமையாக்கியுள்ளது. இதில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வரி விலக்கு பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி உதவித்தொகைக்கான வரி விலக்கு ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் வழங்கும் உணவுக்கான வரி விலக்கு வரம்பு ஒரு வேளைக்கு 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான கடைசி தேதிகள் மற்றும் அபராத விவரங்கள்

வரி செலுத்துவோர் வகைதாக்கல் செய்ய கடைசி தேதி
சம்பளம் பெறுவோர் (ITR-1)ஜூலை 31, 2026
சுயதொழில் செய்பவர்கள் (தணிக்கை தேவையில்லாத ITR-4)ஆகஸ்ட் 31, 2026
தணிக்கை செய்ய வேண்டியவர்கள் (Audit cases)அக்டோபர் 31, 2026
தாமதமாக தாக்கல் செய்தல் (Belated return)டிசம்பர் 31, 2026
திருத்தப்பட்ட படிவம் (தாமதக் கட்டணத்துடன்)மார்ச் 31, 2027

இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால் 1,000 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படும். அதோடு, செலுத்த வேண்டிய வரிக்கு வட்டி வசூலிக்கப்படுவதுடன், நஷ்டங்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லும் (Carry-forward) வசதியையும் இழக்க நேரிடும். கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கவே வருமான வரித்துறை முன்கூட்டியே இந்த வசதியைத் தொடங்கியுள்ளது.

டென்ஷன் இல்லாமல் ITR தாக்கல் செய்வது எப்படி?

வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது எக்செல் யூட்டிலிட்டி (Excel utility) மூலமாகவோ தங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். எக்செல் ஷீட்டில் விவரங்களை ஆஃப்லைனில் பூர்த்தி செய்துவிட்டு, பின்னர் போர்ட்டலில் பதிவேற்றுவது பிழைகளைக் குறைக்க உதவும். வருமானம், முதலீடு மற்றும் வரி விலக்கு விவரங்களைச் சரிபார்த்து நிதானமாகத் தாக்கல் செய்ய இது சிறந்த வழியாகும்.

தவறான படிவத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது மீண்டும் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். எனவே, சரியான படிவத்தைத் தேர்வு செய்வது அவசியம். அதேபோல், உங்கள் வங்கி கணக்கு இ-ஃபைலிங் போர்ட்டலில் முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டிருந்தால் (Pre-validated) மட்டுமே ரீஃபண்ட் தொகை உங்கள் கணக்கிற்கு வரும். ஜூலை மாதத்தில் இணையதளத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க இப்போதே வரித் தாக்கலை முடிப்பது புத்திசாலித்தனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+