டெல்லி: வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மே, ஜூன். ஜூலை மாதம் வந்துவிட்டாலே சம்பளதாரர்கள் அனைவரும் மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். இதற்கு காரணம் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். பொதுவாகவே இந்தியாவில் ஜூலை 31ஆம் தேதி தான் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாக இருக்கும். எந்த காரணம் கொண்டும் வருமான வரி துறை இதனை நீட்டிப்பது கிடையாது.
ஆனால் இந்த ஆண்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. வருமானவரித்துறை இந்த தகவலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது . அதில் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான அறிவிப்பு ஆவணமும் அந்த எக்ஸ் பதிவிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான படிவங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப கணக்கு தாக்கல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் சில காலம் தேவைப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அனைவரும் சுமூகமான முறையில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் எளிதாக்குவதற்காகவும் வெளிப்படை தன்மையை அதிகரிப்பதற்காகவும் 2025 -26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த திருத்தங்களுக்கு ஏற்ப வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்து பல்வேறு சோதனைகள் நடத்தப்படுவதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
கூடுதலாக மே 31 ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய டிடிஎஸ் எனப்படும் மூலத்தில் இருந்து கழிக்கப்படும் வரிகள் சம்பந்தப்பட்ட கணக்குகளில் ஜூன் தொடக்கத்தில்தான் பிரதிபலிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரணங்களாலேவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.எனவே சம்பளதாரர்கள் அவசரம் இன்றி முறையாக திட்டமிட்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications