2023-24 ஆம் கணக்கீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குகளை (ITRs) ஜூலை 31 காலக்கெடுவிற்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனாலும் கடைசி நேரத்தில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக தான் உள்ளது.
ஜூலை 31 ஆம் தேதி அதாவது இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் என்ன நடக்கும் என்பதை தான் இப்போது பார்க்கப்போகிறோம். இன்று தாக்கல் செய்யாவிட்டாலும் டிசம்பர் 31 வரையில் தாக்கல் செய்ய முடியும், ஆனால் அதற்கு பெரும் தொகையை நாம் இழக்க வேண்டியிருக்கும்.

ஜூலை 31 ஆம் தேதி இரவு 12 மணிக்குள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாவிடில் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரையில் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் தாக்கல் செய்யலாம். ஆனால் தாக்கல் செய்யும் இறுதிக்கட்டத்தில் தாமத கட்டணம் மற்றும் கூடுதல் வரி உடன் ITR அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.
5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 5000 ரூபாய் தாமத கட்டணம், 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் கொண்டவர்களுக்கு 1000 ரூபாய் தாமத கட்டணம் விதிக்கப்படும். மத்திய வருமான வரித்துறை இதுவரையிலே ITR தாக்கல் செய்ய கால நீட்டிப்பு அறிவிக்கவில்லை.
மேலும் தாமத கட்டணத்துடன் நிலுவையில் இருக்கும் வருமான வரி-க்கு penal interest விதிக்கப்படும். வருமான வரி சட்டத்தின் நிலுவையில் இருக்கும் வருமான வரி தொகைக்கு மாதம் 1 சதவீத வட்டியை அபராதமாக செலுத்த வேண்டி வரும்.
2022-23 ஆம் ஆண்டில் 7.4 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்த நிலையில் அதில் 5.16 கோடி பேர் அல்லது 70 சதவீதம் பேர் பூஜ்ஜிய வரி அளவை கொண்டுள்ளனர். இதன் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டில் வெறும் 2.24 கோடி பேர் வருமான வரியை அரசுக்கு செலுத்தியுள்ளனர் இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1.6 சதவிகிதம் மட்டுமே.
இந்த 1.6 சதவீத மக்கள் செலுத்திய வருமான வரி தொகை நாட்டின் மொத்த நேரடி வரி வசூலில் சுமார் 27 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கூறுகிறது.
2023, ஜூலை 30 ஆம் தேதி வரையில் சுமார் 6 கோடி பேர் தங்களுடைய வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர், இதில் முக்கியமாக ஜூலை 30 ஆம் தேதி மாலை 6.30 மணி வரையிலான ஒரு நாளில் மட்டும் சுமார் 26.76 லட்சம் பேர் தங்களுடைய வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 - 5 சதவீதம் வரையில் உயரும் வேளையில் இந்த வருடம் 7.6 கோடி என்ற அளவீட்டை தாண்டுமா..?
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications