டெல்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெரும்பாலான திட்டங்கள் பீகார் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டன.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு உதவியாக இருந்தது பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கட்சி தான். எனவே மத்திய அரசு பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி பீகார் மாநிலத்தில் நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தை கவனத்தில் கொண்டு நிதி அமைச்சர் பிரத்தியேக திட்டங்களை அறிவித்தார்.
பீகாரில் மக்கானா வாரியம்: சர்வதேச அளவில் மக்கானா எனப்படும் தாமரை விதைகளுக்கு டிமாண்ட் அதிகரித்து வருகிறது. எனவே மக்கானாவிற்கான சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசு பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. பீகார் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்த நிர்மலா சீதாராமன், மக்கானா விதைகள் உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை இந்த வாரியம் மேற்கொள்ளும் என கூறினார்.
உணவு தொழில்நுட்ப நிறுவனம்: பீகார் மாநிலத்தில் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது கிழக்கு இந்தியாவில் உணவு பதப்படுத்துதலை ஊக்குவிக்கும் என நிதி அமைச்சர் கூறினார். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கவும் இது உதவும் என தெரிவித்தார்.
ஐஐடி விரிவாக்கம்: பீகார் மாநிலம் பாட்னாவில் இருக்கும் ஐஐடி விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
விமான நிலையம்: இந்தியாவில் விமான தேவைகள் அதிகரித்து வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிரீஃன்பீல்ட் விமான நிலையங்கள் நிறுவப்படும் என்றார். இதன் ஒரு பகுதியாக பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.
பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் மேற்கு கோசி கால்வாய் திட்டம் செயல்படுத்த நிதி உதவி வழங்கப்படும் என்றார். புத்தரின் வாழ்க்கை மற்றும் காலங்கள் தொடர்பான இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் மாநிலத்தின் பாரம்பரிய சேலையை உடுத்தி வந்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடனே ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கூட மத்திய அரசு கூட்டணியில் இருக்கும் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது.
freelancer - Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications