உலகம் முழுவதும் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய ஐடி சேவை துறையின் நிலை என்ன என்ற கேள்வி அனைவருக்குமே இருக்கும் நிலையில் தற்போது இதற்கான விடை கிடைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தியா ஐடி சேவை துறைக்குப் பொற்காலமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஏன் தெரியுமா..?
இந்திய ஐடி துறை 2022
இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு டிஜிட்டல் மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் பணிநீக்கத்தை அறிவித்து வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் நேரடியாகப் பணிநீக்கம் என அறிவிக்காவிட்டாலும் முன்லைட்டிங் காரணமாகச் சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, லாபத்தை அதிகரிக்க ஓரிரு காலாண்டில் ஊழியர்களுக்கான வேரியபிள் பே குறைவாகக் கொடுத்தது, பலருக்கு பணிநியமன கடிதம் அளித்தாலும் நிறுவனத்தில் சேரும் நாள் அறிவிக்கப்படவில்லை இதன் வாயிலாக அதிகப்படியான ஐடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
160 பில்லியன் டாலர் திட்டம்
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 160 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி திட்டங்களின் ரினிவல் செய்யப்பட உள்ளது. இந்த ரினிவல் செய்யப்படும் காலத்தில் பொதுவாக ஐடி நிறுவனங்களின் சேவையில் திருப்தி அடையாத வாடிக்கையாளர் வேறு நிறுவனங்களைத் தேடிச் செல்வது வழக்கம்.
புதிய திட்டங்கள்
ஆனால் இந்த முறை இந்த 160 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை ரினிவல் திட்டத்தின் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான பலன் அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இந்த ரினிவல் காலத்தில் 100 - 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பல வருடத் திட்டங்களைப் பெறவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
டெக் சேவை
உலகளவில் தற்போது அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களும் டெக் சேவை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதிலும் குறியாய் உள்ளது. இந்த நிலையில் குறைந்த விலையில் சிறப்பான சேவை அளிக்கும் நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற வாய்ப்பு உள்ளது, இதனால் இந்தியா ஐடி சேவை நிறுவனங்களுக்கு ஜாக்பாட் தான்.
இந்தியா ஐடி சேவை நிறுவனங்கள்
சர்வதேச ஐடி சேவை சந்தையில் மலிவான டெக் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குவதில் இந்திய ஐடி நிறுவனங்கள் முன்னோடியாக இருக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரீனிவல்-க்கு வரும் 160 பில்லியன் டாலர் திட்டங்களில் வங்கி மற்றும் ரீடைல் சேவை திட்டங்கள் அதிகமாக இருக்கும் எனவும் தெரிகிறது.
ரீனிவல் திட்டம்
இந்த 160 பில்லியன் டாலர் ரீனிவல் திட்டத்தில், பெரும்பாலான திட்டங்கள் அமெரிக்க நிறுவனத்தில் இருந்து தான் அளிக்கும், இதேபோல் குறிப்பிட்ட அளவு திட்டங்கள் ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் சந்தையில் இருந்து வரும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
2023 முதல் காலாண்டு
இந்த 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வரும் ரீனிவல் திட்டங்கள் மட்டும் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டால் இந்திய ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது மட்டும் அல்லாமல் பணிநீக்கம் குறித்த அச்சம் இருக்காது.
ஐடி ஊழியர்கள் வாய்ப்பு
அதேபோல் மீண்டும் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்து டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்களை ஈர்க்கும் நிலை உருவாக வாய்ப்பு அதிகம். இதனால் ஐடி ஊழியர்கள் மீண்டும் அதிகச் சம்பளத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!



Click it and Unblock the Notifications