மஹா கும்பமேளா என்பது 114 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிகழ்வாகும். உலகிலேயே உலகத்திலேயே மிகப்பெரிய விழாவாகவும், அதிகளவு மக்கள் ஒன்றாகக் கூடும் விழாவாகவும் UNESCO ஆல் அங்கிகரிக்கப்பட்ட விழாதான் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மஹா கும்பமேளா. இந்த மஹா கும்பமேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் இணையக் கூடிய திரிவேணி சங்கமத்தில் நீராடினால், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கும்பமேளா நடைபெற என்ன காரணம்..?: அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பார்க்கடலை கடந்தனர். அப்போது, பல்வேறு தெய்வீகத்தன்மை கொண்ட பொருட்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளது. கடைசியாக, அமிர்தமும் வந்துள்ளது. இது அசுரர்களுக்கு கிடைக்கக்கூடாது என நினைத்த மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் இருக்கும் கும்பத்தை எடுத்துச் சென்றார். ஆனால், அதில் இருந்து சில துளிகள் பூமியின் சிந்தியுள்ளது. அது விழுந்த இடங்கள்தான் தற்போது பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜயினி, காசி ஆகிய புனித நகரங்களாக மாறியுள்ளது. இதன் நினைவாகத்தான் மஹா கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா, பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கும்பமேளாவில் எதிர்பாராத லாபத்தைத் தொடர்ந்து, இங்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், இங்கு அதிகமான நிறுவனங்கள் ஜெகன்னாத் பூரி ரத யாத்திரையின் பக்கம் திரும்பியுள்ளன. இந்த நிகழ்விற்கான பிராண்ட் ஆர்வம் மற்றும் விளம்பரச் செலவுகள் அதிகரித்துள்ளது. ஜூன் 27ஆம் தேதி முதல் இந்த யாத்திரை தொடங்க இருக்கிறது. மேலும், இந்த ஆண்டு 1.5 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்களை ஈர்க்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
யாத்திரையின் போது, இந்தாண்டு செலவுகள் 14 மடங்கு அதிகரித்து ரூ.50 முதல் ரூ.60 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.3 முதல் ரூ.4 கோடியாக இருந்தது. இதுதொடர்பாக பேசியுள்ள ஊடக மற்றும் பிராண்டிங் நிறுவனமான சாய்பானியின் நிறுவனர் ஸ்ருதி ஹரேஷ் சதுர்வேதி, எங்களுக்கு 26 பிராண்டுகளிடமிருந்து கொள்முதல் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. அடுத்த வாரத்தில் மேலும் 11-12 ஆர்டர்களை முடிப்போம். பிராண்ட் பங்கேற்பின் அடிப்படையில் 60 - 65 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு யாத்ராவிற்கான பிராண்ட் டீல்கள் 10 நாட்களுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மத உணர்வுகளின் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் இருந்து வருகை மற்றும் பங்கேற்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தாண்டு பல பிராண்டுகள் இந்த நிகழ்விற்காக செலவுகளை ஒதுக்காததால் பங்கேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு பிரண்டுகள் ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை திட்டமிட கூறியுள்ளன. ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை ஜகன்னாத் பூரி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் பிராண்டுகளும் அங்கு சந்தைப்படுத்த விரும்புகின்றன. ஒடிசாவில் உள்ள பாலி யாத்ரா மேளா என்பது பிராண்டுகளின் ஆர்வமுள்ள ஒரு இடமாகும். இந்த (ஆன்மீக/கலாச்சார) நிகழ்வுகள் பயணத்தைப் போலவே சந்தைப்படுத்தல் ஏற்றத்தை உருவாக்கியுள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications