ஜப்பான் நாடு பரப்பளவில் மிகவும் சிறிய நாடாக இருந்தாலும் இந்நாட்டின் பொருளாதார மதிப்பு, தொழில்நுட்ப திறன் ஆகியவை மிகவும் அதிகம்.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் நாணயமும் இந்திய நாணயத்தைப் போலவே அமெரிக்க டாலர் ஆதிக்கத்தால் 2022 ஆம் ஆண்டு முதல் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
பங்குச்சந்தை முதலீடுகள் அதிகப்படியான தடுமாற்றத்தைப் பதிவு செய்து வருகிறது, ஆனால் இது உலகில் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் பொதுவான பிரச்சனை.
ஆனால் ஜப்பான் கடந்த சில வருடங்களாக ஒரு முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருவது மட்டும் அல்லாமல் இது அந்நாட்டின் எதிர்காலத்திற்கும் பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
ஜப்பான்
ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் வரலாற்றிலேயே மிகப்பெரிய சரிவைக் எதிர்கொண்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையில் அந்நாட்டு மக்கள் தொகை 644,000 குறைந்து 125.5 மில்லியனாக உள்ளது, இது தொடர்ந்தால் ஜப்பான் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி தான் என எலான் மஸ்க் மட்டும் அல்லாமல் பல பெரும் தலைவர்கள் கடந்த ஆண்டுத் துவக்கத்தில் எச்சரித்தனர்.
ஜப்பான் ஆய்வு
உலக நாடுகளின் கருத்துக்குப் பின்பு ஜப்பான் பல வகையில் ஆய்வு செய்து மக்கள் தொகை தொடர்பாக முக்கியமான முடிவை எடுத்தது. இந்த ஆய்வில் நாட்டின் டோக்கியோ-வை ஒப்பிடுகையில் பிற நகரங்களில் மக்கள் தொகை தொடர்ந்து வேகமாகக் குறைந்து வருவதைக் கண்டறிந்தது.
டோக்கியோ
இதை முதல் கட்டமாகச் சரி செய்யும் வகையில் ஜப்பான் அரசு கிரேட்டர் டோக்கியோ-வை விட்டு வெளியேறிப் பிற நகரங்களுக்கு இடம்பெறும் குடும்பங்களுக்கு, ஒரு குழந்தைக்கு 1 மில்லியன் யென் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே இருந்தாலும் இதன் தொகை தற்போது 3 லட்சம் யென்-ல் இருந்து 10 லட்சம் யென் ஆகத் தடாலடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
10 லட்சம் யென்
ஜப்பான் நாட்டில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள்தொகை விகிதம் குறைந்து வருவதைக் கண்டறிந்த பின்பு அந்நாட்டின் 10 லட்சம் யென் வரையிலான உதவித் தொகை திட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து அதிகமான மக்கள் டோக்கியோ, ஒசாகா மற்றும் பிற பெரிய நகரங்களுக்கு வருவது குறைக்க முடியும்.
வேலை வாய்ப்புகள்
நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முதியவர்கள் என்பதால், வேலை வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக நகரங்களுக்கு இடம்பெயர்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் இப்பகுதிகளில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. இந்த மக்கள் தொகை இடம்பெயர்வு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பாலும் ஏற்பட்டு உள்ளது.
செக்
இந்த 10 மில்லியன் யென் தொகைக்காக யாரவது டோக்கியோ விட்டு வெளியேறுவதாகக் கூறி விட்டு வெளியேறி, அடுத்த சில மாதங்கள் அல்லது வருடத்தில் வந்துவிட்டால் இப்பணத்தை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும்.
ரிமோட் வொர்கிங்
இன்று ரிமோட் வொர்கிங் கலாச்சாரம் அதிகமாகிவிட்ட நிலையில் பிற நகரங்களுக்குச் சென்று டோக்கியோ-வில் இருக்கும் நிறுவனத்திற்குப் பணியாற்றுவது பெரிய விஷயம் இல்லை. இதனால் 2027 ஆம் ஆண்டுக்குள் 10000 பேர் டோக்கியோ விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது.
மக்கள் குஷி
ஜப்பான் அரசு டோக்கியோ விட்டு வெளியேறும் மக்களுக்கு முன்பு 3 லட்சம் யென் மட்டுமே அளித்த போது யாரும் வெளியேற தயாராக இல்லை, ஆனால் இப்போது 10 லட்சம் யென் ஆகத் தடாலடியாக உயர்த்தப்பட்ட நிலையில் அதிகளவிலான மக்கள் முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications