கர்நாடகாவுக்கு ஓடி வரும் ஜப்பான் நிறுவனங்கள்.. சும்மாயில்ல ரூ.7500 கோடி..!

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் கர்நாடகாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.

கர்நாடகா அரசு InvestKarnataka என்ற பெயரில் மூன்று நாட்கள் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய தொழில் கொள்கையையும் கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளன. ஜப்பானில் செயல்படக்கூடிய சுமார் 15 நிறுவனங்கள் கர்நாடக மாநிலத்தில் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

கர்நாடகாவுக்கு ஓடி வரும் ஜப்பான் நிறுவனங்கள்.. சும்மாயில்ல ரூ.7500 கோடி..!

உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் உள்ளிட பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டொயோட்டா கிர்லோஷ்கர் (Toyota Kirloskar Motor Private Limited ) நிறுவனம் கர்நாடகாவில் 3748 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. என்ஐடீஇசி இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் ( NIDEC Industrial Automation ) நிறுவனம் 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதேபோல ஏஎஸ்எம் டெக்னாலஜிஸ் நிறுவனம் 510 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த முதலீட்டாளர் மாநாட்டினை பொறுத்தவரை பெங்களூர் மட்டும் இல்லாமல் பெங்களூருவை சுற்றி இருக்கும் பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் முதலீடு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் முன் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கர்நாடகா அரசு 2025 -2030 ஆம் ஆண்டுக்கான தொழில் கொள்கையை வெளியிட்டது. இதன்படி மாநிலத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தது. இந்த மூன்று நாட்கள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன. கர்நாடக மாநில அரசு பல்வேறு நிறுவனங்களோடு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ குழுமம், டாடா , ரிவ்யூ பவர் , சஸ்லான், பல்டோடா ஸ்டீல் நிறுவனம் , மகேந்திரா குழுமம், ஹீரோ, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஹோண்டா, ஷீண்டர் எலக்ட்ரிக், ஹிடாச்சி எனர்ஜி, டால்மியா சிமெண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களும் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிப் தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் அதிகபட்ச முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+