இந்தியாவின் ஐடி சேவை துறையின் எதிர்காலம் மொத்தமாக முடிந்தது என ஒவ்வொரு முறையும் ஆய்வுகள் வெளியாகும் போதும், இதற்கு நேர் எதிராக ஒரு விஷயம் வெளிச்சத்திற்கு வந்து இந்திய சந்தை மீது புதிய நம்பிக்கை பிறக்கிறது.
அந்த வகையில் உலகிலேயே அதிளவில் முதியவர்களை கொண்ட ஜப்பான் நாட்டின் தொழிற்துறையை காப்பாற்றா அந்நாட்டு நிறுவனங்கள் தற்போது அதிகளவில் வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் ஜப்பான் நாட்டில் இருக்கும் பல கோடி நிறுவனங்களுக்கான டெக் சேவைகளை ஜிசிசி நிறுவனங்கள் வாயிலாக இந்திய மண்ணில் இந்திய ஐடி ஊழியர்களை கொண்டு செயல்படுத்தும் முறை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் டெலாய்ட் வெளியிட்ட முக்கியமான ஆய்வறிக்கையில் இந்தியாவில் மட்டும் சுமார் 100க்கும் அதிகமான ஜப்பான் ஜிசிசி நிறுவனங்கள் உள்ளது என தெரிவித்துள்ளது, இந்தியாவில் இருக்கும் மொத்த ஜிசிசிக்களில் ஜப்பானின் பங்கு 5 சதவீதம் என தெரிவித்துள்ளது.
இதேபோல் APAC பகுதி GCC நிறுவனங்கள் என கணிக்கிட்டால் சுமார் 50 சதவீதம் ஜப்பான் நாட்டின் நிறுவனங்கள் பங்கு கொண்டு உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த 5 வருடத்தில் இரட்டிப்பாகும் என கணித்துள்ளது.
இந்தியாவில் திடீரென ஜப்பான் ஜிசிசி நிறுவனங்கள் வருவதற்கான முக்கியமான காரணம் அந்நாட்டில் அதிகரித்து வரும் முதியோர்கள் எண்ணிக்கையும், எக்கச்சமாக அதிகரித்துவரும் டிஜிட்டல் சேவைகளும் தான். இவை இரண்டையும் சமாளிக்க உலகிலேயே அதிகப்படியான இளைஞர்களை கொண்ட நாடான இந்தியாவை நம்பி இந்த மாற்றத்தை செயல்படுத்த களத்தில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் செயல்படும் ஜப்பான் நாட்டின் ஜிசிசி நிறுவனங்கள் பார்த்தால் வெறும் சப்போர்ட் பணிகளை செய்யக்கூடியவை இல்லை, ப்ராகெட் ஆர்&டி, இன்ஜினியரிங், கிளவுட், பின்டெக், டிஜிட்டல், உற்பத்தி துறையை சார்ந்தாகும். இது நாட்டின் டெக் நிபுணத்துவம் அதிகரிக்க புதிய வழியாக உருவாகியுள்ளது.
சொல்லப்போனால் டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ போன்றவை தற்போது வெளிநாட்டு ஜிசிசி நிறுவனங்கள் செயல்படுத்துவதையும், கன்சல்டிங், ஊழியர் நியமனம் போன்றவற்றில் தனி சேவை பிரிவாக பார்த்து வருகிறது. இதற்காக புதிய வர்த்தக பிரிவாக உருவாக்கப்பட்டு வருமான ஈட்ட துவங்கியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஜிசிசி வர்த்தகம் 470-600 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார பங்கீட்டை கொடுக்கும் என கணிக்கப்படுகிறது. இதன் மூலம் 2-2.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தில் 2.2 - 2.8 சதவீத ஜிடிபி பங்கீட்டை கொண்டு இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்தியா - ஜப்பான் மத்தியிலான வர்த்தக உறவு சமீபத்திய டெல்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் பிரதமர்கள் சந்திப்பு மூலம் பெரியளவில் முன்னேறியுள்ளது. இதேபோல் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தை உள்நாட்டு நாணயத்தை பயன்படுத்தவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications