பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களால் ஒரு கட்டத்திற்கு மட்டுமே உயர முடியும் என்ற முடிவுக்கு வந்துவிடுவதால் அவர்களால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை. 10 அடி நடந்தவர், 11 வது அடி நடந்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதற்கு ஜெய் சௌத்ரி முக்கியமான உதாரணம்.
யார் இந்த ஜெய் சௌத்ரி..? எப்படி 74000 கோடி ரூபாய் சம்பாதித்தார்..? பசி நமக்கு நிதர்சனத்தை கற்றுக்கொடுக்கும், ஏழ்மை பார்க்கும் அனைத்தையும் வாய்ப்பாக மாற்றும் திறன் கொடுக்கும், இவரை இரண்டையும் கல்வி உடன் இணைத்தால் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.

இதற்கு சரியான உதாரணம் தான் ஜெய் சௌத்ரி. இந்திய அமெரிக்கராக இருக்கும் ஜெய் சௌத்ரி Zscaler என்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனத்தை உருவாக்கி சுமார் 74000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனத்திற்கு சிஇஓ-வாக உள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்தவர் ஜெய் சௌத்ரி. இவருடைய வீட்டில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வளர்ந்தவர். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மரத்தடியில் படித்து வந்தார்.
எழ்மையில் தவிப்பவருக்கு படிப்பு கைகொடுக்கும் என்பதற்கு ஏற்ப ஜெய் சௌத்ரி வாரனாசி ஐஐடி கல்லூரியில் கம்பியூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். பின்பு அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைகழகத்தில் இன்டர்ஸ்ட்ரியல்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்த கையோடு ஜெய் சௌத்ரி அடுத்தடுத்து நிறுவனங்களை துவங்கி பெரிய விலைக்கு முன்னணி நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வெளியேறினார். இதனால் குறுகிய காலத்திலேயே அதிகப்படியான அனுபவம், கனெக்ஷன், பணத்தை சம்பாதித்தார்.
1996ல் படிப்பை முடித்த உடன் SecureIT நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Verisign விற்பனை செய்தார். இதை தொடர்ந்து CipherTrust நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Secure Computing Corporation-க்கு விற்பனை செய்தார். பின்னர் AirDefense நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Motorola-வுக்கு விற்பனை செய்தார். இதன் பின் CoreHarbor என்னும் நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை AT&T-க்கு விற்பனை செய்தார்.
இப்படி தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்க அடுத்து 2007ல் Zscaler என்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனத்தை உருவாக்கி 2018ல் அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்டு இன்று சுமார் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அசத்துகிறார். அக்டோபர் 2021ல் இவருடைய சொத்து மதிப்பு 16.3 பில்லியன் டாலராக இருந்து குறிப்பிடத்தக்கது.
ஜெய் சௌத்ரி, ஜோதி என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவின் நவாடா பகுதியின் Reno பகுதியில் 3 பிள்ளைகள் உடன் வசித்து வருகிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications