இந்தியாவில் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டப்பட்டு இருக்கும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்த மசேதாவை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான இதே வேளையில் 118 வரலாற்றை புரட்டிப்போட்டு உள்ளார் ஒரு பெண்.
இந்தியாவின் மிக பழமையான மற்றும் மிகப்பெரிய போக்குவரத்து துறையான இந்திய ரயில்வே துறையின் நிர்வாக குழுவின் (railway board) முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராக ஜெய வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு அனில் குமார் லஹோட்டி இப்பதவியில் இருந்தார்.

ஜெய வர்மா சின்ஹாவின் நியமனம், இந்திய ரயில்வே துறையின் 166 ஆண்டுகால வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டத்தை குறிக்கிறது. காரணம் இந்த மிகப்பெரிய பதவியில் அமரப்போகும் முதல் பெண்ணாக ஜெய வர்மா உள்ளார்.
இவருடைய பணி அடுத்தடுத்து பல பெண் தலைவர்களை ரயில்வே நிர்வாகத்திற்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே துறையின் மிகப்பெரிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரயில்வே வாரியம், இந்திய ரயில்வேயில் உள்ள ஒரு முக்கிய அமைப்பாகும்.
ஜெய வர்மா அலாகாபாத் பல்கலைகழகத்தில் பட்டம்பெற்று 1988 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே டிராபிக் சர்வீசஸ் பணியில் சேர்ந்தார். தற்போது ரயில்வே அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வே நிர்வாக குழுவில் ஆப்ரேஷன்ஸ் மற்றும் பிஸ்னஸ் டெவலப்மென்ட் பிரிவின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.

மேலும் ஜெய வர்மா தான் இந்திய ரயில்வே துறையில் சரக்கு மற்றும் பயணிகள் சேவைக்கு பொறுப்பாகும். சமீபத்தில் 300 உயிர்களை காவு வாங்கிய பாலசோர் ரயில் விபத்துக்கு காரணமாக சிக்னலிங் சிஸ்டம் குறித்து விளக்கம் கொடுத்து மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஜெய வர்மா செப்டம்பர் 1 ஆம் தேதி இப்பதவியில் அமர உள்ளார், இவருடைய பணி காலம் ஆகஸ்ட் 31, 2024 வரையில் இருக்க உள்ளார். இதில் முக்கியமான டிவிஸ்ட் என்னவென்றால் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி ஜெய வர்மா ஓய்வு பெற உள்ளார், இந்த பதவி உயர்வு காரணமாக இப்பதவி காலம் வரையில் பணி காலம் நீட்டிப்பு பெற உள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications