உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் இந்தியர்களாகவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவை சேர்ந்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இந்தியாவை சேர்ந்தவர்.
பெர்பிளெக்சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்தியாவை சேர்ந்தவர் . இப்படி பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் எல்லாம் இந்தியர்களும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் தான் இருந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்திய திறமைகளுக்கு வெளிநாடுகளில் பெருமளவில் மதிப்பு இருந்து வருகிறது . இந்த திறமைகள் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள் .

அண்மையில் ஹாரன் இந்தியா அமைப்பு இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சுந்தர் பிச்சை , சத்ய நாதெல்லா உள்ளிட்டோரை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரு பெண் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். அவர்தான் ஜெயஸ்ரீ உல்லால். அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்தான் ஜெயஸ்ரீ உல்லால்.

பணக்கார இந்தியர்களின் பட்டியலில் இவர் 50,170 கோடி ரூபாய் சொத்து மதிப்போடு உலகின் பணக்கார இந்திய தொழில் முறை மேலாளராக இவர் முதலிடம் பிடித்திருக்கிறார். மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற முக்கிய தொழில்நுட்ப ஜாம்பவான்களை விட இவர் முன்னிலையில் இருக்கிறார்.
லண்டனில் பிறந்தவர் தான் ஜெயஸ்ரீ உல்லால். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பட்டப்படிப்பை படித்து முடித்தவர். 2008 ஆம் ஆண்டு அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பதவியேற்றார். ஜெயஸ்ரீ உல்லால் இந்த நிறுவனத்தை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நெட்வொர்க் ஜாம்பவான்களுக்கு இணையாக உயர்த்தி இருக்கிறார். அரிஸ்டா நெட்வொர்க் என்பது பெரிய டேட்டா சென்டர்களுக்கான கிளவுட் நெட்வொர்க்கிங் சேவையை வழங்கக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தில் இவருக்கு மூன்று சதவீத பங்கு இருக்கிறது. இதுதான் இவரின் சொத்து மதிப்பு இப்படி பல மடங்கு உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம். ஜெயஸ்ரீ உல்லால் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்த பட்டியலில் சத்ய நாதெல்லா இரண்டாம் இடத்தில் உள்ளார். சத்ய நாதெல்லாவின் சொத்து மதிப்பு 9,920 கோடி ரூபாய் ஆகும். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை 5810 கோடி சொத்து மதிப்புடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications