ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் வணிக ரீதியிலான வணிக விமான சேவையை மீண்டும், 3 ஆண்டுகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை, மீண்டும் பல்வேறு நெருக்கடிக்களுக்கு பிறகு தொடங்கவுள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பு ஆண்டின் செப்டம்பர் இறுதிக்குள் தொடங்கலாம் என அதன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்திருந்தார். அப்போது ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு இன்னும் சில அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. அது விரைவில் கிடைக்கலாம் என கூறியிருந்தார்.
அனுமதி சான்றிதழ்
இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தினை இயக்குவதற்கான அனுமதி சான்றிதழை இந்திய விமான போக்குவரத்து ஆணையரகத்திடம் கடந்த மே மாதம் பெற்றனர். இதற்கிடையில் விமானத்தினை இயக்க பைலட்களை இயக்க நிறுவனம் பணியமர்த்தலிலும் இறங்கியுள்ளது. இதில் ஏர்பஸ் ஏ320, போயிங் 737NG, 737 மேக்ஸ் விமானங்களை இயக்கும் விமானிகளை பணியமர்த்தல் செயல்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது.
விமானிகளுக்கு அழைப்பு
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெட் ஏர்வேஸ் விரைவில் பறக்க தயாராக உள்ளது. ஏர்பஸ் ஏ320 அல்லது போயிங் 737 என் ஜி அல்லது மேக்ஸ் விமானங்களை இயக்கும் விமானிகளை எங்களுடன் சேர்க்க அழைக்கிறோம் என அறிவித்துள்ளது. இதற்காக Carreers@jetairways.com என்ற ஐடியினை அணுகலாம் என்றும் அறிவித்துள்ளது.
பெரும் கடன் பிரச்சனை
பெருத்த கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தினால் தனது சேவையினை தொடர முடியாமல் தவித்தது. இதற்கிடையில் தனது விமான சேவைக்கு பெரும் முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு கடன் வழங்கியோர் நிறுவனத்தினை ஏலத்தில் விட எஸ்பிஐ தலைமையிலாக குழு நடவடிக்கையில் இறங்கியது.
ஜலான் கல்ராக் கூட்டமைப்பு
இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு ஜலான் கல்ராக் கூட்டமைப்பானது ஜெட் ஏர்வேஸினை ஏலத்தில் எடுத்தது. இதன் பிறகு தான் தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்த உள்நாட்டு சேவை மற்றும் வெளிநாட்டு சேவைகளையும் மீண்டும் தொடரவும் முயற்சிகள் நடைபெற்று வந்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications