சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்பான செய்திகளை நாம் அடிக்கடி பார்க்க முடிந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வாங்கி இருக்கும் கடன்களை ஒழுங்காகச் செலுத்தவில்லை, ஜெட் ஏர்வேஸ் தன் ஊழியர்களுக்கு ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கவில்லை, ஜெட் ஏர்வேஸ் வியாபாரம் செய்த பலருக்கும் பேமெண்ட் பாக்கி வைத்து இருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் எரிபொருளுக்கான பணத்தை முறையாகச் செலுத்தவில்லை, ஜெட் ஏர்வேஸ் குத்தகைக்கு எடுத்து இயக்கிக் கொண்டிருந்த விமானங்களுக்கான குத்தகைக் கட்டணத்தை முறையாகச் செலுத்தவில்லை என பல புகார்கள் வந்து கொண்டு இருந்தன.
கடைசியில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தான் வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல், பாக்கித் தொகைகளைச் செலுத்த முடியாமல் திவால் ஆகிவிட்டதாக அறிவித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை யாராவது வாங்குவார்களா..? என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தார்கள், ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள், வங்கி சொல்லும் விலைக்கு, ஜெட் ஏர்வேஸை வாங்க, யாரும் முன் வரவில்லை.

கடைசியாக இப்போது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவன சொத்து பத்துக்களை எல்லாம் விற்று, கடனை மீட்டுக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இருப்பினும் இந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் விலை கடந்த அக்டோபர் 22, 2019-ல் இருந்து விலை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.
என்ன 5 - 10 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்குமா..? என அலட்சியமாக கேட்காதீர்கள். சுமாராக 50 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது. கடந்த அக்டோபர் 22, 2019 அன்று, ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் குறைந்தபட்ச விலை 14.70 ரூபாய். இன்று அதே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் விலை 22.6 ரூபாய்.
கடந்த எட்டு வர்த்தக நாட்களாகவே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் 5 சதவிகித அப்பர் சர்க்யூட்டை தொட்டு வர்த்தகம் ஆகாமல் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்பதை இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
இப்படி திடீரென திவால் ஆன ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் விலை அதிகரிப்பதற்கு, சினெர்ஜி என்கிற நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வாங்க முன் வந்திருப்பது தான் காரணம் என்கிறார்கள் சில முதலீட்டாளர்கள். இருப்பினும் இந்த பங்குகளில் முதலீடு செய்யும் போது மிக மிக ஜாக்கிரதையாக, ஆலோசித்து முடிவு எடுக்கவும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications