கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை இருந்து வந்த நிலையில், இந்தியாவில் பற்பல துறைகளும் முடங்கின. இதில் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் நகை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் ஒன்று.
பல மாநிலங்களும் கடுமையான லாக்டவுனை அமல்படுத்திய நிலையில், நகைத்துறையினர் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதோடு, வங்கிகளில் வாங்கிய நகைக்கடனையும் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கும் மத்தியில் தான் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நகைத்துறையினருக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
அது நகை ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டிலுள்ள நகை உற்பத்தியாளர்கள், தாங்கள் வங்கிகளில் வாங்கிய நகைக்கடனுக்காக, பிசிகல் தங்கத்தினை கொடுத்து திரும்ப கடனை செலுத்திக் கொள்ள வங்கிகள் அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, தங்கக் கடனின் ஒரு பகுதியை ஒரு கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட தங்க வடிவில் திருப்பித் தர வங்கிகள், கடன் வழங்குபவர்களுக்கு ஒரு விருப்பத்தினை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதோடு சில நிபந்தனைகளையும் கொடுத்துள்ளது.
தற்போதைய நிலையில், தங்கத்தினை இறக்குமதி செய்ய அதிகாரம் பெற்ற வங்கிகள், இதுவரையில் Gold Monetisation Scheme, 2015ல் பங்கேற்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், நகை ஏற்றுமதியாளர்கள் மற்றும் நகை ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎம்எல் சலுகையை கொடுத்து வந்தன. இது இந்திய ரூபாயில் மட்டுமே கொடுத்து வந்தன. இது கடன் வாங்கப்பட்ட தங்கத்தின் மதிப்புக்கு சமமாக இருக்கும். இந்த விதிகளில் தான் தற்போது ரிசர்வ் வங்கி மறுஆய்வு செய்துள்ளது.
அதெல்லாம் சரி அதென்ன ஜிஎம்எஸ். தங்கத்தினை பணமாக்கும் திட்டம் என்பது நடப்பிலுள்ள தங்க உலோக கடன் திட்டம் தான். இது வீடுகளிலும் நிறுவனங்களிலும் முடங்கிக் கிடக்கும் தங்கத்தினை வெளிக் கொண்டு வந்து, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்தி, நாளடைவில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் ஒரு திட்டமாகும்.
ஊரக வங்கிகள் நீங்கலாக அனைத்து வங்கிகளும் இத்திட்டத்தினை அமல்படுத்த தகுதியுடையவர்கள் தான்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications