கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை இருந்து வந்த நிலையில், இந்தியாவில் பற்பல துறைகளும் முடங்கின. இதில் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் நகை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் ஒன்று.
பல மாநிலங்களும் கடுமையான லாக்டவுனை அமல்படுத்திய நிலையில், நகைத்துறையினர் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதோடு, வங்கிகளில் வாங்கிய நகைக்கடனையும் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கும் மத்தியில் தான் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நகைத்துறையினருக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
அது நகை ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டிலுள்ள நகை உற்பத்தியாளர்கள், தாங்கள் வங்கிகளில் வாங்கிய நகைக்கடனுக்காக, பிசிகல் தங்கத்தினை கொடுத்து திரும்ப கடனை செலுத்திக் கொள்ள வங்கிகள் அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, தங்கக் கடனின் ஒரு பகுதியை ஒரு கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட தங்க வடிவில் திருப்பித் தர வங்கிகள், கடன் வழங்குபவர்களுக்கு ஒரு விருப்பத்தினை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதோடு சில நிபந்தனைகளையும் கொடுத்துள்ளது.
தற்போதைய நிலையில், தங்கத்தினை இறக்குமதி செய்ய அதிகாரம் பெற்ற வங்கிகள், இதுவரையில் Gold Monetisation Scheme, 2015ல் பங்கேற்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், நகை ஏற்றுமதியாளர்கள் மற்றும் நகை ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎம்எல் சலுகையை கொடுத்து வந்தன. இது இந்திய ரூபாயில் மட்டுமே கொடுத்து வந்தன. இது கடன் வாங்கப்பட்ட தங்கத்தின் மதிப்புக்கு சமமாக இருக்கும். இந்த விதிகளில் தான் தற்போது ரிசர்வ் வங்கி மறுஆய்வு செய்துள்ளது.
அதெல்லாம் சரி அதென்ன ஜிஎம்எஸ். தங்கத்தினை பணமாக்கும் திட்டம் என்பது நடப்பிலுள்ள தங்க உலோக கடன் திட்டம் தான். இது வீடுகளிலும் நிறுவனங்களிலும் முடங்கிக் கிடக்கும் தங்கத்தினை வெளிக் கொண்டு வந்து, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்தி, நாளடைவில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் ஒரு திட்டமாகும்.
ஊரக வங்கிகள் நீங்கலாக அனைத்து வங்கிகளும் இத்திட்டத்தினை அமல்படுத்த தகுதியுடையவர்கள் தான்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications