திருச்சி மக்களுக்கு ஜாக்பாட்.. ரூ.1000 கோடி முதலீடு, 250 ஏக்கர் மெகா திட்டம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் ஜிண்டால் குழுமத்தின் ஜிண்டால் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் நிறுவனம் 1000 கோடி முதலீட்டில் தென்னிந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் திருச்சியில் துவங்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

திருச்சி துறைமுகம் அருகே 250 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த புதிய உற்பத்தி ஆலை மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருச்சி மக்களுக்கு ஜாக்பாட்.. ரூ.1000 கோடி முதலீடு,  250 ஏக்கர் மெகா திட்டம்..!!


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜிண்டால் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு C P அகர்வால் மற்றும் தமிழ்நாடு அரசுக்கான தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறையின் மேலாண்மை இயக்குனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திரு V விஷ்ணு, ஐஏஎஸ் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டாக்டர் டிஆர்பி ராஜா மற்றும் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஸ்ரீஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் ஜிண்டால் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் 4வது ஆலையாகவும் தென்னிந்தியாவின் முதல் ஆலையாக துவங்கப்படவுள்ள இந்த ஆலை அடுத்த ஏழு ஆண்டுகளில் படிப்படியாக செயல்பட துவங்கும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஆலைக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஜிண்டால் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு C P அகர்வால் கூறுகையில், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தென்னிந்தியாவில் எங்கள் வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டின் வலுவான உள்கட்டமைப்பு, மேம்பட்ட வர்த்தக வாய்ப்புகள், உள்கட்டமைப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகிய காரணிகள் எங்களை இந்த துறையில் நிலைநிறுத்தவும் மற்றும் எங்கள் வணிகத்தை விரிவாக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் தயாரிப்புகள் மூலம் நிலையான வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வளர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம்" என்று அவர் கூறினார்.


இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு அரசுக்கான தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறையின் மேலாண்மை இயக்குனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திரு V விஷ்ணு, ஐஏஎஸ் கூறுகையில், “தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 இன் வெற்றியை பிரதிபலிக்கும் வகையில், எங்களின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்துகொண்ட முதலீட்டாளர்கள், துறை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரம் ஏற்கனவே உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளிதுறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை வலுப்படுத்தி வருகிறது, இது ஜிண்டால் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் நிறுவனமும் கவனம் செலுத்தி வரும் பகுதியாகும். இந்த புரிந்துணர்வு மூலம் தமிழ்நாட்டில் மையத்தில் அமையவுள்ள இந்த புதிய உற்பத்தி ஆலை மூலம் ஜிண்டால் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் நிறுவனம் தங்கள் வணிகத்தை தென்னிந்தியாவில் பெருக்க தயாராகவுள்ளது" என்று கூறினார்.

உலகளவில், கலவை தயாரிப்புகள் மூன்று மடங்கு இலகுவானதாகவும், இரு மடங்கு வலிமையானதாகவும், அரிப்பை எதிர்க்கும் மற்றும் கடத்துத்திறன் அற்ற அதன் தனித்துவமான பண்புகள் காரணமாக முன்னுரிமை பெற்றுள்ளன.

ஜிண்டால் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஓபி ஜிண்டால் குழும நிறுவனங்களின் ஒரு பகுதியாகும், இது உயர் செயல் திறன் மற்றும் புதுமையான கலவைப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும்.

விரிவான விரிவாக்கத்தில் ஈடுபட்டு வரும் ஜிண்டால் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கு ஹரியானாவில் பல்வேறு கூட்டு உற்பத்தி செயல்முறைகளுக்கு அதிநவீன தர அமைப்புகளுடன் மூன்று உற்பத்தி ஆலைகள் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+