இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ பிக்சட் வயர்லெஸ் ஆக்சஸ் பிரிவின் கீழ் புதிய ஜியோ ஏர்ஃபைபர் சேவை திட்டத்தை கொண்டு வர உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்த மாபெரும் திட்டம் அறிமுகத்திற்கான பணிகளை பல மாதங்களாக செய்து வந்த நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. JIO Airfiber 5ஜி பிராட்பேண்ட் சேவையை அடுத்த 2 வருடத்தில் 200 மில்லியன் வீடுகளில் இணைக்கப்பட உள்ளது.

4ஜி சேவை மூலம் இந்திய டெலிகாம் சேவையிலும், டேட்டா பயன்பாட்டிலும் பெரும் மாற்றத்தை கொண்ட ஜியோ 5ஜி சேவையிலும் முன்னோடியாக இருக்கும் வேளையில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் Jio AirFiber என்ற புதிய பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. 46வது வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி ஜியோ 50 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
Jio AirFiber திட்டம் மூலம் ஜியோ ஸ்மார்ட்ஹோம் சேவைகளை கொண்டு வர உள்ளதாக 46வது வருடாந்திர கூட்டத்தில் ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். இதுநாள் வரையில் நிறுவனங்களுக்கு மட்டுமே அளித்து வந்த Jio AirFiber திட்டம் தற்போது வீடுகளுக்கு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பம் முதல் வெறும் டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஆகாஷ் அம்பானியும், முகேஷ் அம்பானியும், 5ஜி உதவியுடன் தற்போது தனது முக்கிய கனவு திட்டமான connected homes strategy-ஐ நோக்கி பயணிக்க துவங்கியுள்ளனர்.
Jio AirFiber-க்காக உருவாக்கப்பட்டு உள்ள கருவியில் 5G technology, Wi-Fi 6 ஆகியவை செயல்படுத்தக்கூடியவை. இதுமட்டும் அல்லாமல் இந்த கருவி மூலம் ஜியோ செட் டாப் பாக்ஸை இணைக்க முடியும். Jio AirFiber மூலம் 1000 சதுரடி வரையிலான வீட்டில் அல்லது ஒரே floor-ல் இருக்கும் அலுவலகத்தில் 1.5 Gbps வேகத்தில் இண்டர்நெட் சேவையை அளிக்க முடியும்.
இந்திய பிராட்பேண்ட் சேவை தளத்தை தலைகீழாக புரட்டிப்போட போகும் ரிலையன்ஸ் ஜியோ-வின் ஜியோ ஏர்ஃபைபர் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications