ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்தன. இந்த கணிசமான விலை உயர்வு இந்தியாவின் நுகர்வோரை கடுமையாக பாதித்துள்ளது, இந்த விலை உயர்வால் பயனர்கள் வருத்தமடைந்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, X தளத்தில் பல பயனர்கள் கட்டண உயர்வுக்கு எதிராக போஸ்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஜியோ பயனர்கள் திடீர் மாற்றத்தைப் பற்றி புகார் செய்து வருகின்றனர். "#JioBoycott" என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி X தளத்தில் 40,000-க்கும் மேற்பட்ட போஸ்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர். மூன்று நிறுவனங்களை விட குறைவான விலையில் சேவை வழங்கும் BSNL-ஐ மாற்றுத் தேர்வாக பயன்படுத்த, பல பயனர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், சில மலிவு விலையிலான திட்டங்களில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 'அன்லிமிடெட் 5G' சேவையை நீக்கியுள்ளன. முன்னர் இருந்த அதே திட்டத்தில், தினசரி டேட்டா தேவையை பூர்த்தி செய்து வந்த மொபைல் டேட்டா பயனர்கள் இனிமேல் அதை பயன்படுத்த முடியாது. அனால் இப்பொழுது அதிக விலையுடன் அதே டேட்டா பிளான் கிடைக்கிறது.
"JioBoycott" என்ற ஹேஷ்டேக்குக்கு இணையாக, நெட்டிசன்கள் "BSNLkigharwapsi" ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். இது BSNL-க்கான ஆதரவு அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டுகிறது. இது X தளத்தில் 45,000 போஸ்ட்களை கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களின் சேவை திட்டங்களுடன் ஒப்பிடும்போது அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்தின் சேவை திட்டங்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. மேலும் X தளத்தில் உள்ள பயனர்கள் BSNL-க்கு மாற 5G இணைப்புகளை விட்டுவிட தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.
BSNL திட்டம் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை 30 நாட்களுக்கு ரூ.199-க்கு வழங்குகிறது. மறுபுறம், ஏர்டெல் மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டத்தில், ஒரு நாளைக்கு 2GB டேட்டாவிற்கு ரூ.379 ரூபாய்க்கு வழங்குகிறது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்கள்ளுக்கான 2GB டேட்டா திட்டத்தை ரூ.349-க்கு வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை ரூ.600 வரை உயர்த்தியுள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டின் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களில் மிகப்பெரிய விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டம் முதலில் ரூ.2,999 ஆக இருந்தது, தற்போது ரூ.3,599 ஆக அதிகரித்துள்ளது
இந்த விலை உயர்வுக்கு நிறுவனங்கள் காரணம் கூறியுள்ளன. பயனர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை (ARPU) பராமரிக்க இந்த கட்டண உயர்வு அவசியம் என்று அவை தெரிவித்துள்ளன. புதிய கட்டணங்கள் ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு ஜூலை 3-ஆம் தேதியும், வோடபோன் ஐடியா ஜூலை 4-ஆம் தேதியும் அமலுக்கு கொண்டு வந்தன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications