சென்னை: டெலிகாம் துறை கட்டுப்பாட்டு ஆணையமான TRAI மற்றும் மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாக, இந்தியாவில் இருக்கும் டெலிகாம் சேவை நிறுவனங்கள் நாட்டின் சில பகுதிகளில் மட்டும் போன் கால் வரும்போதே அழைப்பவரின் பெயரை காட்டும் Caller ID சேவையைச் சோதனை முறையில் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை மற்றும் ஹரியானாவில் டெலிகாம் சேவை நிறுவனங்கள் சிறிய அளவிலான பகுதிகளில் மட்டும் இந்த சோதனையைச் செய்து வருகின்றன. வரும் வாரங்களில் இந்த சோதனை முறை நாட்டின் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட Truecaller செய்யும் பணியை, இனி இந்த ஆப் இல்லாமலேயே டெலிகாம் சேவை நிறுவனங்கள் உதவியுடன் நம்மை யார் அழைத்தாலும் அவரின் பெயரை காட்டும் Caller ID சேவையை அளிக்கிறது. ஒவ்வொரு மொபைல் எண்ணும் ஆதார் உடன் இணைக்கப்பட்டு உள்ள காரணத்தாலும், 100-க்கு 85 மொபைல் எண்கள் தத்தம் டெலிகாம் நிறுவனத்தின் ஆப் மூலம் இணைக்கப்பட்டு உள்ளதால் இதை எளிதாக செய்ய முடியும்.
TRAI மற்றும் மத்திய அரசு இந்த Caller ID சேவையை வேகமாகக் கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது Truecaller ஆப்-க்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TRAI மற்றும் மத்திய அரசு இச்சேவையைக் கொண்டு வர முக்கியமான காரணம், இந்தியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில், அழைப்பவர் பெயர் தோன்றும் சேவை (CNAP - Calling Name Presentation) முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறது.
இந்த CNAP சேவையின் சோதனைக்குப் பின்பு டிராய் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் இச்சோதனையின் பல காரணிகளின் ஆய்வு முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என டெலிகாம் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் CNAP சேவையைக் கிடைப்பதை, உறுதி செய்வதற்கான உரிய உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று TRAI ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில், இந்த சோதனை முடிந்த பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில், தொழில்நுட்ப சவால்களைக் காரணம் காட்டி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
முகேஷ் அம்பானியின் Reliance Jio நிறுவனம் CNAP சேவை குறித்துக் கூறுகையில் "இது கட்டாய சேவையாக இருக்கக்கூடாது. சிக்னல்களில் இது சுமையை அதிகரிக்கும். மேலும் தாமதம் மற்றும் இணைப்பு தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல தொழில்நுட்ப சிக்கல்கள் உருவாகக் கூடும்" என்று கூறியுள்ளது.
இதேபோல் CNAP சேவையில் "தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான சவால்கள்" இருப்பதாக Airtel நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், CNAP சேவைக்காகத் தனது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு உரிமைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications