முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பீட்டை அதிகரிக்கவும், தனது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான முதலீட்டு மதிப்பை கொடுக்க வேண்டும், புதிய முதலீடுகளை ஈர்க்க ஏதுவான சூழ்நிலையை அமைத்துக்கொள்ளவும் நிதியியல் சேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரிக்க உள்ளது.
சுமார் 20 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பீட்டை பெற்று இருக்கும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 261 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தையில் காலை 10 மணிக்கு பட்டியலிடப்பட உள்ளது. தகுதியான அனைத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் தற்போது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு JIOFIN என்ற பெயரில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதல் 10 நாட்கள் T group-ல் வர்த்தகம் செய்யப்பட உள்ளது. மேலும் JIOFIN பங்குகளின் அப்பர் சர்கியூட் மற்றும் லோவர் சர்கியூட் அளவுகள் 5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
JIOFIN எனப்படும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தை அலுவலகத்தின் வளாகத்தில் நடக்கும் விழாவின் மூலம் 10 மணிக்கு பட்டியலிடப்பட உள்ளது. இந்த சிறப்பு விழாவில் முகேஷ் அம்பானி கலந்துக்கொள்வாரா என்பது தெரியாது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு பிரிக்கப்பட்ட நிலையில் முதல் நாள் வர்த்தகத்தில் அப்பர் சர்கியூட் 5 சதவீத அளவீட்டை எட்டினால் கட்டாயம் 300 ரூபாயை தாண்டும். அடுத்த 6 மாதத்தில் நிலையான வளர்ச்சி அடையும் பட்சத்தில் 1000 ரூபாய் அளவீட்டை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ள நிலையில் இதன் சந்தை மதிப்பு 1.66 லட்சம் கோடி ரூபாய் டாலர் மதிப்பீடு என்றால் 20.3 பில்லியன் டாலர். இதன் மூலம் இந்தியாவின் 33வது பெரிய நிறுவனமாக உள்ளது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், இதோடு NBFC பிரிவில் பஜாஜ் பைனான்ஸ மற்றும் பஜாஜ் பின்சர்வ் தாண்டி 3வது பெரிய நிறுவனமாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications