ஜியோ இண்டஸ்ட்ரீஸ் லிமெடெட்டின் துணை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், மார்க்கெட் மூலதனம் இதுவரை ரூ.31,000 கோடி சரிந்து விட்டது. இதனால் ஜியோ பைனான்ஸ் சர்வீஸஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இன்று 2.47 சதவீதம் உயர்ந்து 217.60 ரூபாயாக உள்ளது.
இன்றைய உயர்வுக்கு இன்று மதியம் 2 மணிக்கு நடக்க இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் முக்கிய காரணமாக இருந்தாலும், இதுநாள் வரையில் சரிய என்ன காரணம் என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஜியோ நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால் பணம் கொட்டோ கொட்டு என்று குவியும் என்ற முதலீட்டாளர்களின் நினைப்பில் மண் விழுந்தது. ஆனால் இன்றைய வர்த்தகத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கை பூத்துள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீஸஸின் பங்குகள் தொடர்ந்து நான்கு நாட்களாக 5 சதவீதம் லோயர் சர்க்கியூட்டில் இருந்தது. ரூ.261.8 என்ற கான்ஸ்டன்ட் விலையில் இருந்து ரூ.213.45க்கு வந்துவிட்டது.
மியூச்சுவல் பண்டுகள் மூலம் தாராளமான விற்பனை செய்யப்பட்டதன் விளைவாக இவ்வாறு விலை குறைந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இண்டெக்ஸ் பண்டுகள் மூலம் விற்கப்படுவதால் கவுன்ட்டரில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து ஜியோ பைனான்ஸ் நிறுவனம் பிரிக்கப்பட்டு பம்பாய் பங்குச் சந்தையில் ரூ.265க்கு பங்குகள் பட்டியலிடப்பட்டது. தேசியப் பங்குச் சந்தையில் ரூ.261.85 ஆக பட்டியலிடப்பட்டது.
டிரேட் டு டிரேட் செக்மென்டில் 10 வர்த்தக நாட்களுக்கு கம்பெனி இருக்கும். இந்த செக்மென்டில் டெலிவரி முறையில் பங்குகள் விற்கப்படும். தினசரி வர்த்தகத்தில் டிரேட் செய்யத் தகுதியில்லை.
ஜியோ பைனான்ஸ் சர்வீஸஸ் தற்போது பம்பாய் பங்குச்சந்தை சென்செக்ஸிலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50இல் மற்ற முக்கிய இண்டெக்ஸ்களுடன் இருக்கும்.
இண்டெக்ஸ் புரொவைடரான ஏசியா இண்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த பங்கை பம்பாய் பங்குச்சந்தையின் அனைத்து இண்டெக்ஸில் இருந்தும் சென்செக்ஸிலிருந்தும் மூன்று நாட்களுக்கு விலக்குவதற்கு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக பங்கு மதிப்பு லோயர் சர்க்கியூட்டை தொட்டதால் இந்த நடவடிக்கை.
முன்னதாக ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் ஆகஸ்ட் 29இல் S&P BSEஇன் அனைத்து இண்டெக்ஸில் இருந்து வெளியேறுவதாக இருந்தது. 3 நாட்களுக்கு லோயர் சர்க்யூட்டை எட்டாமல் இருந்ததால் இந்த நிலைமை இருந்தது. இருப்பினும் விலகல் தேதி மேலும் மூன்று நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் பங்குகள் தொடர்ந்து லோயர் சர்க்கியூட்டை எட்டின.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications